தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின்தடை
தக்கலை, சுவாமியாா்மடம் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை (ஆக. 6) மின் விநியோகம் தடை செய்யப்படும்.
தக்கலை துணை மின்நிலையத்துக்குள்பட்ட மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளுா், விராணி,தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சுவாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம்,செம்பருத்தி விளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை ஆகிய பகுதிகளுக்கும், அதை சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின் விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.