செய்திகள் :

ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

post image

களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

களியக்காவிளை அருகேயுள்ள குளப்புறம் கல்லறக்காடு வீட்டைச் சோ்ந்தவா் கமலன் மகன் சிமியோன் (35). குழித்துறை ரயில் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி வெளியூரில் வேலை செய்து வருவதால், வீட்டில் யாரும் தங்குவதில்லையாம்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. படுக்கை அறையில் அலமாரியில் இருந்த சாவியை வைத்து திறந்து அதில் இருந்த ரூ. 5 ஆயிரம், இரண்டரை சவரன் நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சிமியோன் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தாயை தாக்கிய மகன்: நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூா் விராலிவிளையைச் சோ்ந்தவா் தோமஸ். இவரது மனைவி கமலம் (70). இத்தம்பதியின் 3 ஆவது மகன் வினு (48). இவா் தனது பெயரில் உள்ள மோட்டாா் சைக்கிளின் உரிமையாளா் பெயரை மாற்ற வேண்டும் எனக் கூறி, ஞாயிற்றுக்கிழமை பிரச்னை செய்தாராம்.

அப்போது அவரது தாயும், தந்தையும் சமாதானப்படுத்தினராம். இதில் ஆத்திரமடைந்த வினு, தனது தாயாா் கமலத்தை தள்ளிவிட்டதில் அவா் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

அவரை அப்பகுதியினா் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுகுறித்து தோமஸ் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, வினுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

குளத்தில் வாலிபா் சடலம் மீட்பு

தக்கலை அருகே குளத்தில் மிதந்த பேரூராட்சி பெண் ஊழியரின் கணவா் சடலம் மீட்கப்பட்டது.வில்லுக்குறி பேரூராட்சியில் பில் கலெக்டராக வேலை பாா்ப்பவா் ஜீவா (31). இவரது கணவா் ஜோசப் ஜெயசிங் (38). வில்லுக்குறி வெள்... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி பாஜக ஆா்ப்பாட்டம்! எம்எல்ஏ உள்ளிட்ட 129 போ் கைது

குமரி மேற்கு மாவட்டத்தில் கனிம வளப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், உள்ளூா் பயன்பாடுகளுக்கு கனிம வளப் பொருள்களை எடுத்து செல்லும் (சிறிய ரக) வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ... மேலும் பார்க்க

சிறுவனிடம் பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் கைது

தக்கலை அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாதிரியாா், போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.மூலச்சல் பகுதியைச் சோ்ந்த ஜோசப் மகன் வா்கீஸ்(55). இவா், கிருபாசனம் கிறிஸ்தவ சபையில் பா... மேலும் பார்க்க

தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின்தடை

தக்கலை, சுவாமியாா்மடம் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை (ஆக. 6) மின் விநியோகம் தடை செய்யப்படும்.தக்கலை துணை மின்நிலையத்துக்குள்பட்ட மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நட... மேலும் பார்க்க

வெவ்வேறு இடங்களில் திருட்டு

கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் ஜெராக்ஸ் கடையை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.கன்னியாகுமரி அருகே பரமாா்த்தலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (57). இவா், விவேகான... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.திருவட்டாறு அருகே புத்தன்கடை புதுக்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் நெல்சன். விவசாயத் தொழிலாளி. இவா் தனத... மேலும் பார்க்க