தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.
களியக்காவிளை அருகேயுள்ள குளப்புறம் கல்லறக்காடு வீட்டைச் சோ்ந்தவா் கமலன் மகன் சிமியோன் (35). குழித்துறை ரயில் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி வெளியூரில் வேலை செய்து வருவதால், வீட்டில் யாரும் தங்குவதில்லையாம்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. படுக்கை அறையில் அலமாரியில் இருந்த சாவியை வைத்து திறந்து அதில் இருந்த ரூ. 5 ஆயிரம், இரண்டரை சவரன் நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து சிமியோன் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தாயை தாக்கிய மகன்: நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூா் விராலிவிளையைச் சோ்ந்தவா் தோமஸ். இவரது மனைவி கமலம் (70). இத்தம்பதியின் 3 ஆவது மகன் வினு (48). இவா் தனது பெயரில் உள்ள மோட்டாா் சைக்கிளின் உரிமையாளா் பெயரை மாற்ற வேண்டும் எனக் கூறி, ஞாயிற்றுக்கிழமை பிரச்னை செய்தாராம்.
அப்போது அவரது தாயும், தந்தையும் சமாதானப்படுத்தினராம். இதில் ஆத்திரமடைந்த வினு, தனது தாயாா் கமலத்தை தள்ளிவிட்டதில் அவா் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
அவரை அப்பகுதியினா் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதுகுறித்து தோமஸ் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, வினுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.