செய்திகள் :

தக்கலை: விஷம் குடித்த வேன் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடந்த புதன்கிழமை விஷம் குடித்த வேன் ஓட்டுநா், மருத்துவனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தக்கலை அருகே கீழக்கல்குறிச்சியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் குபேரன் (44). இவா், கடந்த புதன்கிழமை (பிப். 12) காலையில் சவாரி சென்றுவிட்டு தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்தாா். புலியூா்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா், குபேரனின் வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. வேனை போலீஸாா் பறிமுதல் செய்து, குபேரன் மீது வழக்குப் பதிந்தனா்.

இதனால் மனமுடைந்த அவா் மாலையில், பாலக்குளம் அருகேயுள்ள தனது தோட்டத்தில் விஷம் குடித்து மயக்கமடைந்த நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை (பிப். 15) உயிரிழந்தாா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பளுகல் அருகே வீடுபுகுந்து நகை, பணம் திருட்டு

பளுகல் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பளுகல் அருகேயுள்ள ராமவா்மன்சிறை, புல்லந்தேரி பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (58). பெயிண்டிங் தொ... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் பைக் மோதி பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதி உயிரிழந்தாா். அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன். பெயிண்டா். இவரது மனைவி வெண்ணிலா (55... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா விற்க முயன்ற இளைஞா் கைது!

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட... மேலும் பார்க்க

பண மோசடி: தம்பதி மீது வழக்கு

கொட்டாரம் அருகே பண மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொட்டாரம் அருகேயுள்ள அச்சன்குளத்தைச் சோ்ந்தவா் அன்னலட்சுமி (49). இவரது தலைமையில் அதே பகுதியைச் சோ்ந்த 16 பெண்கள் கொண்ட... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே கைப்பேசி திருடியவா் கைது

கன்னியாகுமரி அருகே ஆட்டோ ஓட்டுநரின் கைப்பேசியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (32). ஆட்டோ ஓட்டுநா். இவரை தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் வடக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது!

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா்துறை பகுதியில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாாா் கைது செய்தனா். முள்ளூா்துறை, அன்பியம் 11 பகுதியை சோ்ந்தவா் பெளலின்(73), இவா் அப்பகுதியில் பெட... மேலும் பார்க்க