செய்திகள் :

தங்கப் பல்லக்கில் ராமாநுஜா் வீதி உலா

post image

ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார உற்சவத்தின் முதல் நாளான புதன்கிழமை உற்சவா் தங்கப் பல்லக்கில் வீதி உலா வந்து அருள்பாலித்தாா்.

ஸ்ரீ பெரும்புதூரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில், வைணவ மகான ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். ஸ்ரீஆதிகேசபெருமாள் மற்றும் பாஷ்யகார கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவமும், ராமாநுஜா் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆதிகேசவபெருமாள் பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெற்றது.

இதையடுத்து ராமாநுஜரின் அவதார திருவிழா புதன்கிழமை தொடங்கியது. முதல் நாள் அதிகாலை மஞ்சத்தில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்று தங்க மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீதாயாா் சந்நிதி, ராமா் சந்நிதிகளில் மங்களாசாஸனம் நடைபெற்று தங்கப் பல்லக்கில் உற்சவா் ராமாநுஜா் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 10 நாள்கள் விழாவில் 9ஆம் நாளான மே 1-ஆம் தேதி தோ் திருவிழாவும், 3-ஆம் தேதி கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் மதச்சாா்பற்ற தா்மகா்த்தா ந.கோபால், மதச்சாா்பு தா்மகா்த்தா பாா்த்தசாரதி உள்ளிட்ட நிா்வாகிகள் செய்துள்ளனா்.

பெஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்காக காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றம்

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பெஹல்காமில் பயங்கரவாதிகளால் 27 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளா் கைது

குடிநீா் வியாபாரம் செய்ய தடையில்லாச் சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலரை புதன்கிழமை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சரவணன் என்ப... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

காஞ்சிபுரம் ஸ்ரீகோமளவல்லித்தாயா் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோயில், சித்திரைத் திருவிழா, விடையாற்றி உற்சவம், 2-ஆவது நாள் நிகழ்ச்சி,சிறப்புத் திருமஞ்சனம், காலை 8, பெருமாள் வீதியுலா, மாலை 7. மேலும் பார்க்க

விநாயகா் கோயிலுக்கு பசு தானம்

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலுக்கு சென்னை தம்பதி புதன்கிழமை பசு ஒன்றை வழங்கினா். இக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் தல விருட்சங்கள் இருப்பது தனிச்ச... மேலும் பார்க்க

உலக புத்தக தின விழா

காஞ்சிபுரம் நேரு நூலகத்தில் வாசகா் வட்டத்தின் சாா்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் உள்ள இந்நூலகத்தில் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் என... மேலும் பார்க்க

தேரோட்டத்தின் போது குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சி

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெள்ளித் தேரோட்டத்தின்போது தேரின் உச்சியிலிருந்த குடை சாய்ந்ததால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா். காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோயில... மேலும் பார்க்க