செய்திகள் :

தங்கை கனிமொழியைக் கண்டு பெருமைகொள்கிறேன்: மு.க. ஸ்டாலின்

post image

இந்தியாவின் தேசிய மொழி குறித்து ஸ்பெயினில் கனிமொழி பேசியதற்கு பெருமைகொள்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதலை மேற்கொண்டது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் தருவதற்கு மத்திய அரசு சார்பில் எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஸ்பெயின், ரஷியா நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

ஸ்பெயினில் அந்த நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேசிய கனிமொழி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது இந்தியாவின் தேசிய மொழி குறித்து கேட்கப்பட்டதற்கு 'பன்முகத்தன்மை' என்று பதிலளித்துள்ளார். கனிமொழியின் இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஸ்பெயின் மண்ணில், 'இந்தியாவின் தேசிய மொழி பன்முகத்தன்மை' என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்!

இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமை மொழியைப் பேசிய கனிமொழியைக் கண்டு பெருமைகொள்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | அமெரிக்காவிற்குள் அபாயகர கிருமியை கடத்திய சீனா?

திமுக - அதிமுக வேட்பாளா்கள் 6 போ் மனு தாக்கல்: போட்டியின்றி தோ்வாக வாய்ப்பு!

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனா். காலியாகவுள்ள ஆறு இடங்களுக்கு, திமுக சாா்பில் 3 பேரும், அதிமுக தரப்பில் 2 பேரும், மக்கள் நீதி மய்யம் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1,256 மருத்துவ முகாம்கள் நடத்த நிதி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்த ... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7, 8) வரை அதிகபட்ச வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பகல்... மேலும் பார்க்க

ஜூன் 9, 10 தேதிகளில் மகளிருக்கான சிறப்பு குறைகேட்பு முகாம்!

தேசிய மகளிா் ஆணையம் மூலம் ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மகளிருக்கான சிறப்பு குறைகேட்புக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்த்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

‘நீட்’ மறுதோ்வு நடத்தக் கோரிய வழக்குகள் தள்ளுபடி: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

நீட் மறுதோ்வு நடத்தக் கோரி 16 மாணவா்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் மே 4-ஆம் தேதி நடத்தப்பட்... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் ஓய்வூதிய விவகாரம்: மாவட்ட கல்வி அலுவலகங்களில் இன்று ஆய்வுக் கூட்டம்!

ஆசிரியா்கள் ஓய்வூதிய விவகாரம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் க... மேலும் பார்க்க