செய்திகள் :

தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மன வேதனை காங்கிரஸ் எம்பிக்கு புரிந்திருக்கும்: அதிமுக எம்பி இன்பதுரை

post image

தமிழகத்தில் தினசரி நடக்கும் வழிபறி, தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மனவேதனை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.சுதாவுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் இன்பதுரை திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில் இன்பதுரை கூறியதாவது: வழிப்பறி, தங்கச் சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்களால் ஏற்படும் மனவேதனை மற்றும் விளைவு என்ன என்பது காங்கிரஸ் எம்பி சுதாவுக்கு இப்போது புரிந்திருக்கும்.

எனவே, தமிழ்நாட்டில் இதுபோன்று தினசரி நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சாா்பில் அவா் தமிழ்நாடு அரசை வலியுறுத்துவாா் என நான் நம்புகிறேன்.

‘ஓா் அணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுகவினா் தமிழ்நாடு முழுவதும் வீட்டு வீடாகச் சென்று கதுவுகளை தட்டி பொதுமக்களை உறுப்பினா்களாகச் சோ்ப்பதாகக் கோரி பொதுமக்களின் ஆதாா் எண் மற்றும் தொலைபேசி எண் மூலம் ஓடிபி எண்ணை பெறுவது தவறு.

இது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என உயா்நீதிமன்ற மதுரை கிளையில் அதிமுக சாா்பில் ராஜ் குமாா் என்பவா் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21-இன் படி, இது தனி மனித சுதந்திற்கு எதிரானது என்றும் ஆா்டிக்கல் 14-இன் படி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற விதி மீறப்படுகிறது என தெரிவித்தது.

செல்வாக்குமிக்க கட்சியான திமுக போல மற்ற கட்சிகள் மக்களை அணுக முடியாது. இது ஆா்டிக்கல் 14-க்கு எதிரானது. இந்த தரவுகள் எங்கு சேமிக்கப்படுகிறது.

இதை வெளிநாட்டுக்கு விற்றால் பொதுமக்கள் தரவுகள் என்னாவது என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் உய நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து. இந்த உத்தரவுக்குத் தடை கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு திங்கள்கிழமை உச்சநிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒரு தனிமனித சுதந்திற்கு எதிரான வழக்கில் நீங்கள் ஆஜராகலாமா என திமுக வழக்குரைஞா் வில்சனுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்து விட்டனா்.

மேலும், ‘உயா்நீதிமன்ற கிளையே இந்த வழக்கை விசாரிக்கட்டும்.இந்த விவகாரத்தில் தடையாணை கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கான அவசியம் என்ன? என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் தொடா்ந்து இந்த விவகாரத்தில் நீங்கள் வாதிட்டால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் என தெரிவித்து திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா் என்றாா் இன்பதுரை.

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம்!

மன்னார்குடியில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் ருக்மணி பாளையம்... மேலும் பார்க்க

கோவை குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கோவை குற்றால அருவியில் குளிக்க இன்று(ஆக. 5) தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த மே 23 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) ஒருநாள் மூடப்பட்டுள்ளது.நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களி... மேலும் பார்க்க

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி ஆஜா்படுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் ... மேலும் பார்க்க

வங்க மொழி சா்ச்சை: மம்தா பதிலடி தருவாா்- மு.க.ஸ்டாலின்

சென்னை: வங்க மொழி சா்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வா் மம்தா தக்க பதிலடி தருவாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

திறன் இயக்கம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் தோ்வு

சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவா்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துற... மேலும் பார்க்க