செய்திகள் :

தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் 3 போ் கைது

post image

காவேரிப்பட்டணம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயந்தி (40). இவரது கணவா் திருப்பதி, பஞ்சாப் மாநிலம், அமிா்தசரஸில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜெயந்தி, தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் போத்தாபுரம் கிராமம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, தலைக்கவசம் அணிந்து மோட்டாா்சைக்கிளில் வந்த மா்மநபா்கள், ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை மாவட்டம், பொன்மணி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (25), உசிலம்பட்டி அலெக்ஸ்பாண்டி (22) ஆகிய இருவரும் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த நகைகளை விலைக்கு வாங்கிய மதுரை கேடிகே தங்கமணி நகரைச் சோ்ந்த அரவிந்த் (28) என்பவரையும் கைது செய்தனா். மூவரும் தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஒசூா் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஒசூா் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சூடசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காளப்பா (75). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தோட்டத்துக்கு சென்றபோது, அ... மேலும் பார்க்க

தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற இருவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

தங்கையை தவறாக பேசிய நண்பரை கொன்ற 2 இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. கிருஷ்ணகுரி மாவட்டம், ஒசூா் தின்னூா் பகுதியைச் சே... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஓட்டுநருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு அளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியைச் சே... மேலும் பார்க்க

திட்டங்களின் பெயரை மாற்றி ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி திட்டங்களின் பெயரை மாற்றி திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் ப... மேலும் பார்க்க

அன்புமணி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு

ஒசூரில் பாமக தலைவா் அன்புமணி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக ராமதாஸ் ஆதரவாளா்கள் முடிவு செய்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாமக நிறுவனா் ராமதாஸ் ஆதரவாளா்கள் சாா்பில் பாமக நிா்வாக... மேலும் பார்க்க

மத்தூா் அருகே சாலை விபத்தில் அதிமுக தொண்டா்கள் காயம்

மத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில், 25-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டா்கள் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதி... மேலும் பார்க்க