செய்திகள் :

தஞ்சாவூர்: மனைவியின் தங்கை போலீஸில் புகார்; மாமனாரை தெலங்கானாவிற்குக் கடத்திக் கொலைசெய்த மருமகன்!

post image

தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சேகர் (65). இவரது மூத்த மகள் ராகினி (35). இவர் தஞ்சையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணியாற்றினார். அந்த ஹோட்டலில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த்ராவ் (42) என்பவர் அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம். இதில் அரவிந்த்ராவுக்கும், ராகினிக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. ராகினி குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. அதை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கொலைசெய்த அரவிந்தராவ்

அரவிந்த்ராவின் நடவடிக்கையில் திருப்தி இல்லாததால் அவர் மீது ராகினியின் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்துள்ளனர். இதற்கிடையில் தன் மாமனாரிடம் அரவிந்த்ராவ் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அரவிந்தராவ் ராகினியின் தங்கச்சி போட்டோவை தவறாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ராகினியின் தங்கையும், அவரது அம்மாவும் அர்விந்த்ராவ் மீது போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ராகினி குடும்பத்தினர் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அரவிந்த்ராவ் மிரட்டி வந்துள்ளார். ஆனால் மாமனார் உட்பட குடும்பத்தினர் யாரும் வழக்கை வாபஸ் பெறமுடியாது என்று சொல்லிவிட்டனர்.

இதையடுத்து தனது மாமனாரை கடத்தி சென்று மிரட்டினால் வழக்கை வாபஸ் வாங்கி விடுவார்கள் என நினைத்த அரவிந்த்ராவ், அதற்காக திட்டமிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 19.12.2024 அன்று சாலியமங்கலம் வந்துள்ளார் அரவிந்த்ராவ். பின்னர் தான் திட்டமிட்டபடி மாமனார் சேகரை தெலங்கானா மாநிலத்திற்கு கடத்தி சென்று மிரட்டியுள்ளார். ஆனால் அப்போதும் வழக்கை வாபஸ் வாங்க முடியாது என்றதால் ஆத்திரத்தில் அரவிந்தராவ் மாமனாரை கொலை செய்துவிட்டார்.

இது குறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து அரவிந்த்ராவை தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸார் தீவிரமாக தேடுவதை அறிந்த அரவிந்த்ராவ் நெடுவாசல் விஏஓ விவேக் முன்பு இன்று சரணடைந்தார். பின்னர் விஏஓ விவேக் அவரை அம்மாப்பேட்டை போலீஸில் ஒப்படைத்தார். கொலை வழக்கில் தொடர்புடையவர் ஏழு மாதங்களுக்குப் பிறகு சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு - அதிர்ச்சியில் பெற்றோர்; போலீஸ் விசாரணை!

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் காரியாங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றன... மேலும் பார்க்க

மும்பை: குடிபோதையில் கடலுக்கு காரை ஓட்டிய நண்பர்கள்; சுற்றுலா வந்த இடத்தில் சோதனை..

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரிஜேஷ் சோனி (33), ஆந்திராவைச் சேர்ந்த நஜீப் (42) ஆகியோர் மும்பையை சுற்றிப்பார்க்க வந்தனர். அவர்கள் மும்பையில் உள்ள தங்களது நண்பர் யாதவ் என்பவருடன் சேர்ந்து மும்பை முழுக்க க... மேலும் பார்க்க

தலைமறைவாக இருந்த பி.ஏ.சி.எல் இயக்குநர் கைது - 5 கோடி மக்களிடம் ரூ.49,000 கோடி மோசடி செய்தது எப்படி?!

இந்தியாவில் அதிக வட்டி தருவதாக கூறி முதலீடுகளை பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் எத்தனையோ நடந்துள்ளது. அதில் மிகவும் முக்கியமானது பி.ஏ.சி.எல் அக்ரோ டெக் கார்ப்ரேசன் செய்த மோசடியாகும். இந்தியாவிலேயே மிக... மேலும் பார்க்க

Sneha Debnath: ``ஒரு CCTV கேமரா கூட வேலை செய்யவில்லையா?'' - உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் கவலை

6 நாட்களுக்கு முன் காணாமல் போன டெல்லி பல்கலைக்கழக மாணவி சினேகா டெப்நாத் (Sneha Debnath), சடலமாக யமுனை ஆற்றிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார். மாணவி சினேகா திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் டெல்லி பல... மேலும் பார்க்க

Sneha Debnath: 6 நாள்களுக்குப் பின் யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி.. என்ன நடந்தது?

டெல்லியில் உள்ள ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த திரிபுராவைச் சேர்ந்த மாணவி ஸ்நேகா தேவ்நாத் (Sneha Debnath) (19) கடந்த ஆறு நாள்களாக காணவில்லை. அவரது குடும்பத்தின... மேலும் பார்க்க

கோவை டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.2.9 கோடி பறிப்பு; தனியறையில் இருந்தவரை மீட்ட போலீஸார்

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நன்றாகப் படித்து உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கூட சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி விடுகின்றனர். கோவையைச் சேர்ந்த பிரப... மேலும் பார்க்க