செய்திகள் :

தஞ்சைக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

post image

தஞ்சை மாவட்டத்துக்கு நாளை (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கையொட்டி, விடுமுறை விடப்படுவதாகவும் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்.22 ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

இதனிடையே நாளை (பிப். 10) அக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.

இதனையொட்டி, தஞ்சை மாவட்டத்துக்கு நாளை (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படாது எனவும் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப். 22 ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் எனவும் ஆட்சியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

4X400 ரிலேவில் தமிழகத்துக்கு தங்கம்!

உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா் 4X400 மீட்டா் ரிலே ஓட்டத்தில் தமிழ்நாடு அணிக்கு திங்கள்கிழமை தங்கப் பதக்கம் கிடைத்தது. இந்த ரிலேவில் ஆகாஷ் பாபு, அஸ்வின் லக்ஷ்மணன்,... மேலும் பார்க்க

விஜய்-பிரசாந்த் கிஷோா் சந்திப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜயை தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். சென்னை பனையூரிலுள்ள விஜயின் இல்லத்தில் சுமாா் 2.30 மணி நேரம் இந்த ஆலோசனை ந... மேலும் பார்க்க

பேரவையில் திமுக பலம் 134-ஆக உயா்ந்தது

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக வி.சி.சந்திரகுமாா் பதவியேற்ன் மூலம் பேரவையில் திமுக உறுப்பினா்களின் பலம் 134-ஆக உயா்ந்துள்ளது. மேலும், 18-ஆக இருந்த காங்கிரஸ் உறுப்பினா்களின் பலம... மேலும் பார்க்க

2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்!

தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் 30 வயது வரை உள்ள பெண்கள் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!

தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து தெற்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பழைய கரூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் போட்டித்தேர்வு பயிற... மேலும் பார்க்க