TVK : 'நானே முதலமைச்சர்; பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை!' - பனையூரில் விஜய் கர்ஜித்ததி...
தஞ்சையில் ஆதரவற்ற 20 சடலங்கள் காவல் துறையினரால் நல்லடக்கம்
தஞ்சாவூரில் ஆதரவற்ற நிலையில் இருந்த 20 சடலங்களை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்தனா்.
தஞ்சாவூா் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக் கல்லூரி, தாலுகா ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதங்களில் உயிரிழந்த 13 ஆண்கள், 7 பெண்கள் என 20 பேரின் உடல்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இந்த உடல்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. எனவே, இந்த உடல்களையும் அடக்கம் செய்ய காவல் துறையினா் முடிவு செய்தனா்.
இதன்படி தஞ்சாவூா் ராஜகோரி சுடுகாட்டில் 20 உடல்களையும் மாநகராட்சி பணியாளா்கள் உதவியுடன் ஒரே இடத்தில் காவல் துறையினா் நல்லடக்கம் செய்தனா்.
இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், காவல் ஆய்வாளா் வி. சந்திரா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மனோகரன், காா்த்திக், மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், நகா் நல அலுவலா் எஸ். நமச்சிவாயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மலா் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.