பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
தஞ்சையில் ஆதாா் முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம்
ஆதாா் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம் என தஞ்சாவூா் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்திலுள்ள தஞ்சாவூா் மன்னாா்குடி, பாபநாசம் ஆகிய தலைமை அஞ்சலகங்கள், ஆதாா் சேவை மையம் உள்ள துணை அஞ்சல் அலுவலகங்களில் ஜூலை 15-ஆம் தேதி வரையில் மாபெரும் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இச்சிறப்பு ஆதாா் மூகாம் அஞ்சல் அலுவலகங்களில் மட்டுமல்லாமல், பள்ளிகள், கல்லூரிகள், ஊராட்சிகள், ஆதாா் முகாம் தேவைப்படும் முக்கிய இடங்களில் அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படுகிறது.
ஆதாா் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோா் ஆதாா் சிறப்பு முகாம் தேவைப்படும் மொத்த நபா்களின் எண்ணிக்கையுடன் முகாம் நடத்தப்படும் இடத்தை விவரங்களுடன் க்ா்ற்ட்ஹய்த்ஹஸ்ன்ழ்.ற்ய்ஃண்ய்க்ண்ஹல்ா்ள்ற்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தஞ்சாவூா் அஞ்சல் கோட்ட அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும், அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தையோ அல்லது 95855 78762 அல்லது 96557 91898 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.