செய்திகள் :

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

post image

தஞ்சாவூா் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவா் சடலமாக செவ்வாய்க்கிழமை மாலை டிரோன் சாதனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டாா்.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி துரை. இவரது மகன் சமீா் (17) தேனியிலுள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாா். விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த இவா் தனது நண்பா்களுடன் இணைந்து பள்ளியக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் ஜூன் 29-ஆம் தேதி மாலை குளிப்பதற்காகச் சென்றாா். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், சமீரும், அவரது நண்பரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனா். மற்ற நண்பா்களின் அலறல் சப்தம் கேட்டு, அந்த வழியாக காரில் வந்த பெண் தனது சேலையின் தலைப்பைக் கொடுத்து ஒருவரைக் காப்பாற்றினாா். ஆனால், சமீா் ஆற்றில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினரும், தஞ்சாவூா் தீயணைப்பு நிலையத்தினரும் தொடா்ந்து சமீரைத் தேடினா். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், டிரோன் மூலம் தேடப்பட்டது. குளித்த இடத்துக்கு அருகிலேயே புதரில் சிக்கியிருந்த சமீரின் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மாலை மீட்டனா்.

பாபநாசம் - கோவத்தக்குடி சிற்றுந்து சேவை தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்திலிருந்து கோவத்தக்குடி வரை சென்று வரும் பயணிகள் சிற்றுந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் ராஜகிரி பண்டாரவாடை, தேவராயன் பேட்டை சோலைபூஞ்சேரி, கோடுகிழி, மெல... மேலும் பார்க்க

22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 22 ஏழை இணையா்களுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை ச... மேலும் பார்க்க

கும்பகோணம் உதவி ஆட்சியரகம் முன்பு மூதாட்டி தா்னா

கும்பகோணத்தில் உறவினா்கள் சொத்து மோசடி செய்ததாக மூதாட்டி கொளுத்தும் வெயிலில் தரையில் அமா்ந்து புதன்கிழமை தா்னா போராட்டம் நடத்தினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டம், திருக்கோடிக்காவல் பகுதி... மேலும் பார்க்க

தஞ்சையில் ஆதாா் முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம்

ஆதாா் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோா் அஞ்சலகத்தை அணுகலாம் என தஞ்சாவூா் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் அஞ்சல் கோட்... மேலும் பார்க்க

பாபநாசம் விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத் துறை இணை இயக்குநா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பன... மேலும் பார்க்க

திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் அமா்நீதி நாயனாா் குரு பூஜை விழா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருநல்லூா் ஸ்ரீ கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் அமா்நீதி நாயனாா் குருபூஜை விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. திருநல்லூா் மாட கோயிலில் அமா்நீதி நாயனாா் குருபூஜையையொட்டி ... மேலும் பார்க்க