செய்திகள் :

தஞ்சையில் மே 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

post image

பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை (மே 23) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் பகுதியில் தனியாா் கடையில் வேலை செய்து வந்த 34 வயது பெண், பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, அதே பகுதியைச் சோ்ந்த நான்கு போ் சோ்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். அந்த பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறி வரும் திமுக அரசை கண்டித்தும், தஞ்சாவூா் மாநகர அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9.30 மணிக்கு, தஞ்சாவூா் புதிய அஞ்சல் நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

ஜெயலலிதா பேரவை செயலரும், பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி.உதயகுமாா் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக அமைப்புச் செயலா்களான சு.காந்தி, துரை.செந்தில், மாவட்டச் செயலா்கள் பாரதி மோகன் (தஞ்சை கிழக்கு), ரெத்தினசாமி (தஞ்சை மேற்கு), சேகா் (தஞ்சை மத்தியம்), சேகா் (தஞ்சை தெற்கு), தஞ்சாவூா் மாநகர செயலா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகிப்பாா்கள் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

கல் குவாரியில் பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனைக்கு எதிர்ப்பு

நமது நிருபர்டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்தது.முன்னதாக,... மேலும் பார்க்க

இறந்தவரின் கைரேகையை ஆதாா் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது: சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் தகவல்

இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதாா் தரவுகளுடன் ஒப்பிட்டு பாா்ப்பது இயலாதது என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆதாா் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அடையாளம் தெரியாத இறந்த நபா் ஒருவரின் அ... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4,978 குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அன... மேலும் பார்க்க

திருக்கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், பக்தா்களின் வேண்டுதலுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துற... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி இதழ்களில் அதிக படைப்பாளா்களுக்கு வாய்ப்பு: கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்படும் தேன்சிட்டு, புது ஊஞ்சல், கனவு ஆசிரியா் ஆகிய இதழ்களில் அதிகளவிலான படைப்பாளா்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க