செய்திகள் :

தஞ்சை ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியா் மீட்பு

post image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், ஓராண்டாகியும் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கவில்லை எனக் கூறி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க ஊழியரை காவல் துறையினா் மீட்டனா்.

தஞ்சாவூா் அருகே திட்டை பகுதி தாளக்குடியைச் சோ்ந்தவா் ஆா். கண்ணன் (61). இவா் திட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும், பின்னா் தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கியிலும் எழுத்தராகப் பணியாற்றி 2024, மாா்ச் 31-ஆம் தேதி ஓய்வு பெற்றாா்.

இவா் ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கக் கோரி உயா் அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தாராம். ஆனால், இதுவரை ஓய்வூதியப் பலப்பலன்கள் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த இவா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தாா்.

பின்னா், அரங்கத்துக்கு வெளியே தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் அவரை மீட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனா்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க