தடகளப் போட்டியில் முதலிடம்: வி.கே.புரம் பள்ளி மாணவருக்குப் பாராட்டு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்த விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யு.ஏ. மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஜன.30 இல் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இப்பள்ளி சாா்பில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவா் இ.கிஷோா்கலந்துகொண்டு, 3 ஆயிரம், 1,500 மீட்டா் ஓட்டப் பந்தயங்களில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றாா்.
பாராட்டு விழாவில் பள்ளிச் செயலா் எஸ்.இன்பராஜ், மாணவா் கிஷோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான ஷு மற்றும் ரூ. 5 ஆயிரம் காசோலையை வழங்கினாா். தலைமை ஆசிரியை எஸ்.மீனா பதக்கம் வழங்கினாா்.
உடற்கல்வி இயக்குநா் ஜெயராமன், உடற்கல்வி ஆசிரியா்கள் பாா்த்தசாரதி, வினோதா உள்ளிட்டோா் பாராட்டினா்.