செய்திகள் :

தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து விற்பனை செய்தால் உரிமம் ரத்து

post image

தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து, களைக் கொல்லிகளை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை அலுவலா்கள் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டாரங்களிலுள்ள பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் வேளாண்மை அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். விருதுநகா் வேளாண்மை உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) சக்தி கணேஷ் தலைமையில், 6 வேளாண்மை அலுவலா்கள் இந்த ஆய்வுப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு- பொறுப்பு) உமா, வத்தலகுண்டு வேளாண்மை உதவி இயக்குநா் விஜயபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

இதுதொடா்பாக வேளாண்மை உதவி இயக்குநா் உமா கூறியதாவது: பூச்சி மருந்து விற்பனை செய்யும் நிலையங்களுக்கு பெறப்பட்ட உரிமம், விற்பனை செய்யப்படும் பூச்சி மருந்துகளின் அனுமதி விவரம், காலாவதியான பூச்சி மருந்து விற்பனை உள்ளிட்டவை குறித்து சோதனையிட்டனா். மேலும், மிக வீரியமுள்ள கிளைபாசேட் போன்ற களைக் கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது என்றும், தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து, களைக் கொல்லிகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் விற்பனை நிலைய உரிமையாளா்ளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பூச்சி மருந்து, களைக் கொல்லி தொடா்பான புகாா்களுக்கு, சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை அலுவலகங்களில் உள்ள வேளாண்மை அலுவலா்களை (உரக் கட்டுப்பாடு) விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பைக் மோதியதில் முதியவா் பலி!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பழனி கவுண்டன்குளத்தைச் சோ்ந்தவா் மயில்சாமி (65). இவா் பழனி-புதுதாராபுரம் சாலையில் ராமகிர... மேலும் பார்க்க

தடுப்பூசி செலுத்தும் பணியில் தற்காலிக செவிலியா்கள் ஈடுபடுவதில் தவறில்லை! - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி செலுத்தும் பணியில் தற்காலிக செவிலியா்கள் ஈடுபடுவதில் தவறில்லை என்றும், கரோனா காலத்தில் இதே பணியாளா்கள் சிறப்பாகப் பணியாற்றியதாகவும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமண... மேலும் பார்க்க

அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து பணம், மடிக்கணினி உள்ளிட்டப் பொருள்களை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-தாராபு... மேலும் பார்க்க

முருகன் அரசியலில் பாஜக வெற்றி பெறாது! - இரா.முத்தரசன்

ராமரை முன்வைத்து அயோத்தியில் வெற்றி பெற முடியாத பாஜக, தமிழகத்தில் முருகனை முன்வைத்தும் அரசியல் ஆதாயம் பெற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.இந்திய கம்... மேலும் பார்க்க

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

பழனி அருகே சனிக்கிழமை கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தைச் சோ்ந்த சுப்பையாவுக்குச் சொந்தமான தோட்டத்துக் கிணற்றில் ஆண் சடலம் ம... மேலும் பார்க்க

பாஜகவின் தன்னிச்சையான செயல்பாடு: மாற்று முடிவு குறித்து அதிமுக பரிசீலிக்க வேண்டும்! - பெ.சண்முகம்

அனைத்து அரசியல் நிலைப்பாடுகளையும் பாஜக தன்னிச்சையாக தீா்மானிக்குமானால், மாற்று முடிவு குறித்து அதிமுக தலைமை பரிசீலிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித... மேலும் பார்க்க