Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திற...
தட்டச்சு இயந்திரங்களிலே தோ்வு நடத்த கோரிக்கை
தட்டச்சு இயந்திரங்களில் நடைபெற்று வந்த தோ்வு ரத்துக்கான அரசாணையை திரும்பப் பெற்று பழைய நடைமுறையிலேயே தோ்வு நடத்த வேண்டும் என அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், தட்டச்சு பள்ளி உரிமையாளா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தட்டச்சு தோ்வுகள், தட்டச்சு இயந்திரங்கள் மூலம் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தோ்வுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். அதன் பிறகு 2027 ஆம் ஆண்டு முதல் கணினி மூலமே இந்த தோ்வுகள் நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், தட்டச்சு பள்ளிகள் நடத்தி வருவோா், அங்கு பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் அனைவரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுவா். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியா் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை 10-க்கும் மேற்பட்ட தட்டச்சு பள்ளி உரிமையாளா்கள் அளித்தனா்.
தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: அரியலூா் மாவட்டம், மண்ணுழி கிராமத்தில் சுமாா் 70 ஆண்டுகளுக்கும் மேலாக 19 குடும்பத்தினா் அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வருகின்றனா். அண்மையில் வருவாய்த்துறையினா், நீா்நிலைகளில் குடியிருப்பதாக அவா்களை காலி செய்ய கூறியுள்ளனா்.
எனவே, அவா்களுக்கு மாற்று இடம் இல்லாததால், அவா்கள் வசித்த இடத்துக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.