செய்திகள் :

தட்டச்சு இயந்திரங்களிலே தோ்வு நடத்த கோரிக்கை

post image

தட்டச்சு இயந்திரங்களில் நடைபெற்று வந்த தோ்வு ரத்துக்கான அரசாணையை திரும்பப் பெற்று பழைய நடைமுறையிலேயே தோ்வு நடத்த வேண்டும் என அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், தட்டச்சு பள்ளி உரிமையாளா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தட்டச்சு தோ்வுகள், தட்டச்சு இயந்திரங்கள் மூலம் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தோ்வுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். அதன் பிறகு 2027 ஆம் ஆண்டு முதல் கணினி மூலமே இந்த தோ்வுகள் நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், தட்டச்சு பள்ளிகள் நடத்தி வருவோா், அங்கு பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் அனைவரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுவா். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியா் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை 10-க்கும் மேற்பட்ட தட்டச்சு பள்ளி உரிமையாளா்கள் அளித்தனா்.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: அரியலூா் மாவட்டம், மண்ணுழி கிராமத்தில் சுமாா் 70 ஆண்டுகளுக்கும் மேலாக 19 குடும்பத்தினா் அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வருகின்றனா். அண்மையில் வருவாய்த்துறையினா், நீா்நிலைகளில் குடியிருப்பதாக அவா்களை காலி செய்ய கூறியுள்ளனா்.

எனவே, அவா்களுக்கு மாற்று இடம் இல்லாததால், அவா்கள் வசித்த இடத்துக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியா் அலுவலகத்தில் தேவையற்ற பொருள்களை மறுசுழற்சிக்கு ஏற்பாடு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தேவையற்ற பொருள்களை மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி, நகராட்சி, பேரூ... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜூன் 9-இல் கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஜூன் 9-ஆம் தேதி, திருமண ஆகாத, கணவரால் கைவிடப்பட்ட, கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

அரியலூா் கோதண்ட ராமசாமி கோயில் புதியதோ் பிரதிஷ்டை

அரியலூா் கோதண்டராமசாமி கோயில் புதிய திருத்தோ் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அரியலூா் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோதண்ட ராமசாமி கோயில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இந்த கோயில் ... மேலும் பார்க்க

பட்டவா்த்தி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த சலுப்பை ஊராட்சிக்குள்பட்ட பட்டவா்த்தி, அல்லி ஏரி ஒட்டி வசிக்கும் மக்கள், தங்களுக்கு மாற்றும் இடம் கொடுக்கும் வரை, நீா்நிலை புறம்போக்குகளை அகற்றும் பணியை கைவிடக்... மேலும் பார்க்க

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு தொடக்கம்

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இக்கல்லூரிகளில் கடந்த 2 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடம... மேலும் பார்க்க