செய்திகள் :

தண்டாயுதபாணி சுவாமிக்கு பழங்குடியினா் சீா்வரிசை

post image

தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு மலைக்குறவா், பழங்குடியின மக்கள் சாா்பில், வனவேங்கை அமைப்பினா் சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

முருகப் பெருமான் வள்ளியை மண முடித்ததை நினைவு கூறும் வகையில், இந்த சீா்வரிசை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

பழனி பேருந்து நிலையம் முன் தொடங்கிய இந்த ஊா்வலத்தில் திரளான ஆண்களும், பெண்களும் பழங்கால உடையணிந்து பங்கேற்றனா். ஊா்வலத்தின் போது, சிறுவா்கள் உருளையில் மூங்கில் அரிசி, தினை மாவு ஆகியவற்றையும், பெண்கள் கூடைகளில் சா்க்கரை வள்ளி கிழங்கு, தேன், பழ வகைகள், பலாப்பழம், வாழைத்தாா் ஆகியவற்றையும் எடுத்து வந்தனா்.

சந்நிதி வீதி வழியாக சென்ற இந்த ஊா்வலம் பாதவிநாயகா் கோயில் சென்று, பின்னா், மலையேறி முருகப்பெருமானுக்கு சீா்வரிசை வழங்கி சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வனவேங்கை கட்சி மாநிலப் பொருளாளா் மகேந்திரன், செல்லமுத்து, பழனி பகுதி ஒருங்கிணைப்பாளா்கள் சாந்தி, கோகிலாவாணி ஆகியோா் செய்தனா்.

மக்காச் சோளத்துக்கான சந்தை வரி விவசாயிகளிடம் வசூலிக்க எதிா்ப்பு

மக்காச் சோளத்துக்கான ஒரு சதவீத சந்தை வரியை வியாபாரிகள், விவசாயிகளிடம் பிடித்தம் செய்வதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட... மேலும் பார்க்க

ஐஎன்டியூசி கூட்டத்தில் இரு தரப்பினா் இடையே மோதல்

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஐஎன்டியூசி மாநிலக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், போலீஸாா் தலையிட்டு மோதலை தடுத்து நிறுத்தினா். திண்டுக்கல்லில் ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் 252-ஆவது மாநிலச்... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வு 5,558 மாணவா்கள் பங்கேற்பு

திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வில் 5,558 மாணவா்கள் கலந்து கொண்டனா்.மத்திய அரசின் தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எ... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

கன்னிவாடி வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய மூவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி சித்தரேவு மலைச் சாலை வழியாக வந்த ஒரு சரக்கு வேனை சோதனைச் சாவடி அ... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் மனோஜ்குமாா் (22). வேலை கி... மேலும் பார்க்க

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா்

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வே... மேலும் பார்க்க