செய்திகள் :

தண்டோரா

post image

இறால் வளர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 28-ம் தேதி முதல் 14 நாள்களுக்கு ‘இறால் வளர்ப்பு நுட்பங்கள்’ பயிற்சி தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. இறால் பண்ணை அமைத்தல் தொடர்பான குளம் தயாரிப்பு, விதை சேமிப்பு, தீவன மேலாண்மை, அடிப்படை சுகாதார கண்காணிப்பு மற்றும் அறுவடை உள்ளிட்ட விஷயங்களைக் கற்றுக்கொள்ள, இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும். பன்னிரண்டாம் வகுப்புப் படித்தவர்கள், கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள், தற்போது பண்ணை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர், இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 0461 2903324 | செல்போன்: 94870 78758

தேனீ வளர்ப்பு

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பயிர்ப் பாதுகாப்பு மையத்தின் கீழ் இயங்கும் வேளாண் பூச்சியியல் துறையில் அக்டோபர் 27-ம் தேதி முதல் 26 நாள்களுக்கு தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ‘தேனீ வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. வணிக ரீதியில் தேனீ வளர்ப்புக் குறித்த அனைத்து தொழில்நுட்பங்களும் கற்றுத்தரப்படும். வயது வரம்பு 18-35-க்குள் இருத்தல் வேண்டும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு 93635 29576, 94868 93905

காளான் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 28-ம் தேதி ‘பால் காளான் மற்றும் சிப்பிக் காளான் வளர்ப்பு’, 27 மற்றும் 28-ம் தேதிகளில் ‘பழங்களிலிருந்து ஜாம், ஸ்குவாஷ், பழக்கூழ் தயாரிப்பு’, 29-ம் தேதி ‘சூரிய கூடார உலர்த்தியை அமைத்தல் மற்றும் மானியம் குறித்தான வழிகாட்டல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716

கட்டணப் பயிற்சி |

வெள்ளாடு வளர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்டோபர் 28-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.590. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 99405 42371

6.5 லட்சம் மரங்களை வளர்த்திருக்கும் திரைப்பட நடிகர்! சுவையில் போட்டிபோடும் கோட்டிமுளை கத்திரிக்காய்!

6.5 லட்சம் மரங்களை வளர்த்திருக்கும் திரைப்பட நடிகர்!இந்தப் பூமியைப் பசுமையாக்கணும்ங்கற எண்ணத்தோடு பலரும் மரம் வளர்ப்புல ஈடுபட்டு வர்றாங்க. சினிமா பிரபலங்கள் சிலரும், தங்களால் இயன்ற பங்களிப்புகளைச் செஞ... மேலும் பார்க்க

மலர்களைத் தாக்கும் கொம்பன் ஈ அளவோ சிறியது; பாதிப்போ பெரியது நஷ்டம் தவிர்க்க, இயற்கை வழி தீர்வுகள்!

கொய் மலர்கள் சாகுபடியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. உதிரி மலர்கள் சாகுபடியில் மதுரை முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ... மேலும் பார்க்க

மண்புழு உர நீர் தயார் செய்வது எப்படி? வாழையில் வேர் அழுகல் நோய்க்கு இயற்கை தீர்வு...

“நான், 3 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். கன்றுகள் நடவு செய்து 5 மாதங்கள் ஆகின்றன. தற்போது பெய்து வரும் கனமழையால், என் தோட்டத்தில் 4 நாள்களாகத் தண்ணீர் தேங்கியுள்ளது. வேர் அழுகல் ஏற்படாமல் இருக்க, ... மேலும் பார்க்க

வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்வு; வினாடிக்கு 2573 TMC வெளியேற்றப்படுவதால் வெள்ளம் | Photo Album

வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம் வைகை ஆற்றில் வெள்ளம்Rain Update... மேலும் பார்க்க

ஈரோடு: 5000 பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி; சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் தொடக்கம் | Photo Album

பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை விதைக்கும்பனை ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; விளைந்தும் பயனில்லை; கவலையில் விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூரில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் மழையால்... மேலும் பார்க்க