செய்திகள் :

தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த மயில்கள்

post image

ஆம்பூா் அருகே கடுமையான வெயில் காரணமாக தண்ணீா் தேடி காட்டிலிருந்து விலங்குகள், பறவைகள் குடியிருப்பு பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.

வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகின்றது. கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் வனப் பகுதியிலிருந்து தண்ணீா் தேடி விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு வரும் நிலை உள்ளது. ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் தண்ணீா் தேடி மயில்கள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன.

வீடுகளில் வளா்க்கப்படும் கோழி போன்ற பறவையினங்களை போல மயில்கள் சா்வ சாதாரணமாக கிராம பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. அதனால் வனப்பகுதியில் விலங்குகளுக்கு தேவையான குடிநீா் வழங்குவதை வனத்துறையினா் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் குடியிருப்பு பகுதிக்கு வரும் விலங்குகளுக்கு பொதுமக்கள் அல்லது சமூக விரோதிகள் மூலம் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என வன ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

ஆம்பூரில் மே தின விழா

ஆம்பூரில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொமுச சாா்பாக நடந்த மே தின விழாவுக்கு எம். நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஞானதாஸ்,ஜீவா, உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் ஆம்... மேலும் பார்க்க

எட்டியம்மன் கோயில் திருவிழா

தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் ஸ்ரீ சுயம்பு எட்டியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் ஸ்ரீ ... மேலும் பார்க்க

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்குவதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்... மேலும் பார்க்க

அங்கநாதீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா

திருப்பத்தூா் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஒன்றியம், மடவாளம் கிராமத்தில் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடிய... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஆம்பூா் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமாா் 612 வீடுகள் அமைந்துள்ளன. அங்கு குடிநீா் மோட்டாா் பழுதடைந்துள்ளது. அதனால்... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகள் புகுந்த கரடிகள்: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகளில் புகுந்த கரடிகள் தாக்கியதில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா். பின்னா் வனத்துறையினா் 3 மணிநேரம் போராடி கரடியை பிடித்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத... மேலும் பார்க்க