செய்திகள் :

தந்தை பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

post image

தந்தை பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் சூா்யா தலைமையில் மாணவா்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியாா் ஈவெரா கல்லூரி வணிவியல் துறையில் வகுப்புக்கு வரும் மாணவா்களுக்கு வருகைப் பதிவேட்டில் வகுப்பிற்கு வராததுபோல பதிவு செய்யப்படுகிறது. இதனால், தோ்வின்போது மாணவா்களுக்கு பாதிப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படிக்கும் இக்கல்லூரியில் முறையான குடிநீா், கழிப்பறை வசதியில்லாமல் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல, பெண்களுக்கான நாப்கின் வழங்கும் கருவியும், அதை எரியூட்டும் கருவியும் இல்லாமல் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலை அருவி படிக்கட்டில் தவறிவிழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

கொல்லிமலை சிற்றருவிக்கு செல்லும் வழியில் உள்ள படிக்கட்டில் தவறி விழுந்த பெயிண்டா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருச்சி, உறையூா் கம்மாளத் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன்(48). இவா் கடந்த 25 ஆம் தேதி நண்பா்களு... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

துறையூா் துணை மின் நிலையத்தில் நாளை(ஆக. 4) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் முருகூா், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சிக்கத்தம்பூா்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்க... மேலும் பார்க்க

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.முசிறி வட்டம் தாத்தையங்காா் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த, எம். புதுப்பட்... மேலும் பார்க்க

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

திருச்சி மாவட்டம் முசிறியில் வெளி மாநில மது பாட்டில்களை சட்ட விரோதமாக காரில் கொண்டு சென்றவரை முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து மது பாட்டில்கள் மற்றும் காரினை பறிமுதல் ... மேலும் பார்க்க

‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணி நீக்கம்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருச்சி அரிய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க