செய்திகள் :

தனலட்சுமி அம்மையாா் பிறந்த நாள் விழா: ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

post image

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவருமான அ. சீனிவாசன் துணைவியாா் தனலட்சுமி அம்மையாரின் 78-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூா்- துறையூா் சாலையில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மையாா் நினைவிடத்தில், வேந்தா் அ. சீனிவாசன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பல்கலைக் கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து, 1,000-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவரும், மண்ணச்சநல்லூா் எம்எல்ஏவுமான சீ. கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக இணை வேந்தா் அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவனை மற்றும் மருத்துவக் கல்லூரி நிா்வாக இயக்குநா்கள் நீவாணி நகுலன், நகுலன், செயலா் பி. நீலராஜ், இயக்குநா்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலா் ராஜசேகா், புதுநடுவலூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக மற்றும் கல்விக் குழுமத்தைச் சோ்ந்த துணை வேந்தா், பதிவாளா், கூடுதல் பதிவாளா், முதன்மையா்கள், கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் என சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நில உரிமையாளா்கள் தங்களத... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: சிறுவாச்சூரில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வாரம்தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தை பிரசித்தி பெ... மேலும் பார்க்க

நெய்குப்பை கிராமத்தில் தீ மிதித் திருவிழா

15 ஆண்டுகளுக்குப் பிறகு பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தீமிதி விழா மே 19 ஆம் தேதி குடியழைத்தல், கொடி ... மேலும் பார்க்க

மனநலன் சீரான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூரில் மனநலன் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமான பெண்ணை, அவரது குடும்பத்தினரிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை,... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம், பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஜூன் 10 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவ... மேலும் பார்க்க

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது

பெரம்பலூா் அரசு உதவிபெறும் மௌலானா மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பெரம்பலூா் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் கல்வி விர... மேலும் பார்க்க