செய்திகள் :

தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை

post image

நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் அருகே சின்ன தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(46). இவர் குருசாமிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் வியாழக்கிழமை காலை சுமார் 8 மணி அளவில், புதுச்சத்திரம் அருகே மாணவர்களை அழைத்துக் கொண்டு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். ஏளூர் கிராமத்தில் பேருந்து வளைவு ஒன்றில் திரும்பியபோது, அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த்(27) என்பவருக்கும், அவருக்கும் இடையே வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது இருவரும் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த் கண்மூடித்தனமாக விஜயகுமாரின் உயிர்நாடியை தாக்கியுள்ளார்.

இதில் சுருண்டு விழுந்த பள்ளி பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவத்துக்கு சென்ற புதுச்சத்திரம் போலீஸார், விஜயகுமார் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ்கண்ணன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் ஆய்வாளர் கோமதி வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் அரவிந்தை கைது செய்தார்.

தாக்குதல் காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஓட்டுநரின் உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

ஆட்சியருக்கு கடிதம் எழுதிய மாணவா்: பள்ளிக்கு நேரில் சென்று கலந்துரையாடல்!

A private school bus driver was beaten to death by an auto driver near Namakkal.

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல் நலம் குறைவு காரணமாக வியாழக்கிழமை(ஜூலை 17) காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த சில நாள்களாக உடல் பாதிக்கப்பட்டிருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியா் ம... மேலும் பார்க்க

காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு: திருச்சி சிவாவுக்கு இபிஎஸ் கண்டனம்

காமராஜர் குறித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியி... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

சிதம்பரம்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், திமுக, பாமக, நாம் தமிழர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து சுமார் 750 பேர் வியாழக்கிழமை தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.ட... மேலும் பார்க்க

டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல்: 150 பேர் கைது

திருவள்ளூர்: இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக... மேலும் பார்க்க

கம்பத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி முன்விரோதம்: ஒருவர் வெட்டி கொலை, 2 பேர் காயம்

கம்பத்தில் ரேக்ளா ரேஸ் போட்டி முன்விரோதம் காரணமாக இளம்பரிதி புதன்கிழமை இரவு மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கம்பம் ஜல்லிக்கட்டு தெரு... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: தனிப்படை விசாரணை

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்திலுள்ள வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது குறித்து தனிப்படை ப... மேலும் பார்க்க