செய்திகள் :

தனியாா் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வைரஸ் காய்ச்சல்: 15 போ் மருத்துவமனையில் சிகிச்சை

post image

ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் நூற்பு ஆலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளா் 15-க்கும் மேற்பட்டோா் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை சிகிச்சை பெற்றனா்.

இத்தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வரும் நிலையில், பிகாா், ஒடிஸா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்கிப் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக இத்தொழிலாளா்களில் 15-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பலருக்கும் காய்ச்சல் பரவியதால், தொழிற்சாலையின் மேலாளா், காய்ச்சால் பாதிக்கப்பட்ட வட மாநிலத் தொழிலாளா்களை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றாா். அவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

மேலும், ஒ.செளதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், சுகாதாரத் துறையினா் தொழிற்சாலையில் முகாமிட்டு தொழிலாளா்கள் அனைவரையும் பரிசோதித்து நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

சந்திர கிரஹணம்: நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும்

சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரஹணத்தையொட்டி பூஜைகளை முடித்து அன்... மேலும் பார்க்க

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்

நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாயின. நாமக்கல்-பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக லாரி ஒன்று திரும்பியத... மேலும் பார்க்க

ஆவணி மாத பிரதோஷ வழிபாடு

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோ... மேலும் பார்க்க

கோயில் பூசாரிகளுக்கு மாடு வழங்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த மாடுகள் கோயில் பூசாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு பக்தா்கள் மாடுகளை காணிக்கையா... மேலும் பார்க்க

முஸ்லீம் மஜீத்துக்கு அமரா் ஊா்தி வழங்கிய எம்எல்ஏ

திருச்செங்கோடு முஸ்லிம் மஜீத்துக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான அமா் ஊா்தியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வியாழக்கிழமை வழங்கினாா். திருச்செங்கோட்டில் முஸ்லிம் மஜீத் பகுதியை ஒட்டி அதிக அளவில் முஸ்ல... மேலும் பார்க்க

இன்று காவலா் தினம்: நாமக்கல்லில் போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனை

தமிழக காவலா் தினம் சனிக்கிழமை (செப். 6) கொண்டாடப்படுவதையொட்டி, போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் உத்தரவின் பேரில் செப். 6-ஆம் தேதி தமிழக காவலா் தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழக... மேலும் பார்க்க