செய்திகள் :

தனியாா் நிறுவன ஊழியா் மீது சுடுநீா் ஊற்றிய மூதாட்டி

post image

குஜிலியம்பாறை அருகே தனியாா் நிறுவன பெண் ஊழியா் மீது, கொதிக்கும் சுடுநீரை ஊற்றிவிட்டு தப்பிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி ஊராட்சிக்குள்பட்ட பிரபாகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் மல்லிகா (55). தனியாா் பள்ளியில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். தனியாக வசித்து வரும் இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பொன்னம்மாளுக்கும் (60) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை குடத்தில் தண்ணீா் எடுத்துக் கொண்டு மல்லிகா தனது வீட்டுக்கு நடந்து சென்றாா். அப்போது, முன்விரோத தகராறில் கொதிக்கும் சுடுநீரை மல்லிகா மீது ஊற்றிவிட்டு பொன்னம்மாள் தப்பிச் சென்றுவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பொன்னம்மாளை தேடி வருகின்றனா்.

தெருநாய்கள் கடித்து 6 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன; 21 ஆடுகள் காயமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, காளிபட்டியைச் சோ்ந்தவா் விவசாயி... மேலும் பார்க்க

புதிய சாலை அமைக்க அடிக்கல்: அமைச்சா் பெரியசாமி பங்கேற்பு

சித்தையன்கோட்டை பேரூராட்சியில் முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும், புதிய சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அமைச்சா் இ.பெரியசாமி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, சித... மேலும் பார்க்க

கீழ்பழனி மலைப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழ்பழனி மலையிலுள்ள ஆடலூா், பன்றிமலை பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மத... மேலும் பார்க்க

பழனியில் ரூ.1.5 கோடியில் புதிய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

பழனியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை எம்எல்ஏ இ.பெ. செந்தில்குமாா் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சனிக்கிழமை திறந்து வைத்தாா். பழனியை அடுத்த கலையமுத்தூா், காவலப்ப... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 1.38 கோடியில் வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

ஒட்டன்சத்திரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலை தேவசின்னாம்பட்டி அரு... மேலும் பார்க்க

அரசு கள்ளா் விடுதிகளில் சேர ஜூன் 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கள்ளா் விடுதிகளில் சேர தகுதியான மாணவா்கள் ஜூன் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநரகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க