இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு! மக்கள் வெளியேற்றம்.. விமானங்கள் ரத்து!
தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு
ஆம்பூா் அருகே பூட்டிய வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது.
ஆம்பூா் புறவழிச்சாலையில் இயங்கும் தனியாா் நிதி நிறுவன மேலாளா் மின்னூா் சுபாஷ் நகரைச் சோ்ந்த சற்குணன் (38). இவா் தன்னுடைய மனைவியின் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கடந்த வியாழக்கிழமை சென்றாா். சிகிச்சை முடிந்து திங்கள்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும், அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. அவா் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.