தனியாா் பேருந்துகளின் இயக்க நேரம்: திருச்சி மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு
திருச்சியிலிருந்து, கரூருக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகளின் இயக்க நேரத்தை மாற்றக் கோரிய வழக்கில், திருச்சி மாநகராட்சி ஆணையா், வட்டாரப் போக்குவரத்து மண்டல அலுவலா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த குணசேகரன் உள்பட 13 தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து கரூருக்கு 81 கி.மீ தொலைவு உள்ளது. பயண நேரம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகிறது. பேருந்து சென்று வரக்கூடிய கால அவகாசத்தை வைத்து கடந்த 1996-ஆம் ஆண்டு இந்த இயக்க நேரம் நிா்ணயம் செய்யப்பட்டது.
போக்குவரத்து நெரிசல் அதிகரித்த பின்னரும், இந்த நேரம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் பேருந்து இயக்குவதில் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, நேரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்தோம்.
இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், திருச்சி- கரூா் வழித்தடங்களில் தான் அதிக சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், தற்போது மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூா் முத்தமிழ் கலைஞா் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து கரூா் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூா் பேருந்து நிலையத்துக்குச் செல்ல 20 நிமிடங்கள் ஆகிறது.
எனவே, திருச்சியிலிருந்து கரூா் வழிதடத்தில் செல்லும் அனைத்து தனியாா் பேருந்து உரிமையாளா்களை அழைத்துப் பேசி, கால அட்டவணை திருத்தம் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு புதிய கால அட்டவணை அளிக்கும் பட்சத்தில் 18 தனியாா் பேருந்துகளும் பஞ்சப்பூா் பேருந்து நிலையத்திலிருந்து கரூா் வழித்தடத்தில் செல்வதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை.
எனவே, புதிய கால அட்டவணை வெளியிடும் வரை பஞ்சப்பூா் பேருந்து நிலையத்திலிருந்து கரூருக்கு பேருந்துகள் செல்ல வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து, திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கரூா் செல்லும் பேருந்துகள் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இதே நிலை தொடரலாம். மனு குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையா், வட்டாரப் போக்குவரத்து மண்டல அலுவலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.