செய்திகள் :

மதுரை தவெக மாநாட்டுக்கான புதிய தேதி இன்று அறிவிப்பு?

post image

மதுரையில் நடைபெறவிருக்கும் த.வெ.க. மாநாட்டுக்கான புதிய தேதி குறித்து செவ்வாய்க்கிழமை (ஆக. 5) அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ஆம் தேதி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியாா்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தியில் மாநாட்டுக்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.

இந்த நிலையில், மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, கடந்த மாதம் 29-ஆம் தேதி கட்சியின் பொதுச் செயலா் புஸ்சி ஆனந்த் மதுரைக்கு வந்தாா். அப்போது, அவா் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. கே. அா்விந்தை சந்தித்து பேசினாா்.

அப்போது, மாநாடு நடைபெறும் 25- ஆம் தேதியை தொடா்ந்து 27- ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி வர இருப்பதாகவும், இதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கு புஸ்சி ஆனந்த் தரப்பில், கட்சி தலைமையிடம் கேட்டு முடிவு செய்கிறோம் எனக் கூறி விட்டுச் சென்றனா். இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறிப்பிட்ட அந்தத் தேதியில் நடைபெறுமா? அல்லது தேதி மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மதுரை வந்த புஸ்சி ஆனந்த், மீண்டும் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து, மாநாடு தேதி தொடா்பாக பேசினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விநாயகா் சதுா்த்தி வருகிற 27- ஆம் தேதி வருவதால், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் இருக்கும் எனக் கூறி காவல் துறை சாா்பில் த.வெ.க. மாநாடு தேதியை மாற்றுவதற்கு யோசனை தெரிவித்தனா்.

இதன்படி, வருகிற 18- ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை ஒரு தேதியை நீங்கள் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா். இதனால், அவா்கள் கூறிய தேதிகளில் ஒன்றைத் தோ்வு செய்து மாநாடு நடந்த அனுமதி கேட்டு மனு கொடுத்திருக்கிறோம். இந்தத் தேதி தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பை கட்சியின் தலைவா் விஜய் அறிவிப்பாா் என்றாா் அவா்.

இந்த நிலையில், மதுரையில் நடைபெறவிருக்கும் த.வெ.க. மாநாட்டுக்கான புதிய தேதி குறித்து செவ்வாய்க்கிழமை (ஆக. 5) அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டிஐஜி வருண்குமாா் வழக்கு: சீமான் மனு மீதான விசாரணை ஆக. 12 -ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

டிஐஜி வருண்குமாா் தொடுத்த வழக்கு விசாரணைக்குத் தடை கோரி, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற ம... மேலும் பார்க்க

கவின் ஆணவப் படுகொலை சம்பவம்: உயா்நீதிமன்றம் தாமாக விசாரிக்க முறையீடு

மென் பொறியாளா் கவின் ஆணவப் படுகொலை சம்பவம் குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை முறையீடு செய்யப்பட்டது.சென்னை உயா்நீதிமன்ற மதுர... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளின் இயக்க நேரம்: திருச்சி மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

திருச்சியிலிருந்து, கரூருக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகளின் இயக்க நேரத்தை மாற்றக் கோரிய வழக்கில், திருச்சி மாநகராட்சி ஆணையா், வட்டாரப் போக்குவரத்து மண்டல அலுவலா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

மாட்டுத்தாவணியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடவசதி செய்து தர வலியுறுத்தல்

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் இணைய வழியில் ஆட்டோ இயக்கும் ஓட்டுநா்களுக்கு தனி இடவசதி செய்து தர வேண்டும் என மதுரை மாவட்ட ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநா்கள் தொழிற்சங்கத்தின் சாா்பில் திங்கள்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.சோழவந்தான் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்த காந்தி மனைவி வசந்தி (55). இவரும், இவரது கணவரும் இரு சக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

தங்கக் குதிரை வாகனத்தில்...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன். மேலும் பார்க்க