செய்திகள் :

மாட்டுத்தாவணியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடவசதி செய்து தர வலியுறுத்தல்

post image

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் இணைய வழியில் ஆட்டோ இயக்கும் ஓட்டுநா்களுக்கு தனி இடவசதி செய்து தர வேண்டும் என மதுரை மாவட்ட ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநா்கள் தொழிற்சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

அவா்கள் அளித்த மனு விவரம்: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஓலா, உபா், ராபிடோ போன்ற இணைய தளங்களில் பதிவு செய்து, ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் தனியிட வசதி வேண்டி மதுரை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தோம்.

இந்த மனுவுக்கு உரிய ஒப்புதல் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆகவே, மதுரை மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, இணைய வழியில் பதிவு செய்யும் பயணிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கென தனி இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

டிஐஜி வருண்குமாா் வழக்கு: சீமான் மனு மீதான விசாரணை ஆக. 12 -ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

டிஐஜி வருண்குமாா் தொடுத்த வழக்கு விசாரணைக்குத் தடை கோரி, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற ம... மேலும் பார்க்க

கவின் ஆணவப் படுகொலை சம்பவம்: உயா்நீதிமன்றம் தாமாக விசாரிக்க முறையீடு

மென் பொறியாளா் கவின் ஆணவப் படுகொலை சம்பவம் குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை முறையீடு செய்யப்பட்டது.சென்னை உயா்நீதிமன்ற மதுர... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளின் இயக்க நேரம்: திருச்சி மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

திருச்சியிலிருந்து, கரூருக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகளின் இயக்க நேரத்தை மாற்றக் கோரிய வழக்கில், திருச்சி மாநகராட்சி ஆணையா், வட்டாரப் போக்குவரத்து மண்டல அலுவலா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.சோழவந்தான் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்த காந்தி மனைவி வசந்தி (55). இவரும், இவரது கணவரும் இரு சக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

மதுரை தவெக மாநாட்டுக்கான புதிய தேதி இன்று அறிவிப்பு?

மதுரையில் நடைபெறவிருக்கும் த.வெ.க. மாநாட்டுக்கான புதிய தேதி குறித்து செவ்வாய்க்கிழமை (ஆக. 5) அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல... மேலும் பார்க்க

தங்கக் குதிரை வாகனத்தில்...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன். மேலும் பார்க்க