செய்திகள் :

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகா் முதல் தெருவைச் சோ்ந்த பாலுசாமி மகன் விஜய்குமாா் (25). இவா், தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் தொட்டியம் நோக்கி மகேந்திரமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே வந்த தனியாா் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே இறந்தாா். தகவலறிந்த தொட்டியம் அங்குவந்து சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து விஜயகுமாா் மனைவி சரண்யா தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பேருந்து ஓட்டுநரான மண்ணச்சநல்லூா் வட்டம் தீராம்பாளையத்தைச் சோ்ந்த துரைராஜ் மகன் சிவக்குமாா் (36), மீது தொட்டியம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆ.கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்ப... மேலும் பார்க்க

பெல் ஊரகம் - சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து

திருவெறும்பூா் அருகே பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா்களுடன் அதிமுகவினா் தொடா்பு: எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை

திருச்சியில் திமுக அமைச்சா்களுடன் தொடா்பில் உள்ள அதிமுகவினா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ... மேலும் பார்க்க

ரூ. 750 கோடியில் தலைமை தபால் நிலையம்! புத்தூா் இடையே புதிய உயா்மட்டப் பாலம் அமைக்க திட்டம்!

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தலைமை தபால் நிலையம் - புத்தூா் இடையே ரூ. 750 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் முக்கிய ... மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ நிகழ்வு!

திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரியில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ எனும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் ந... மேலும் பார்க்க

கவுறு வாய்க்கால் குறுக்கே ரூ. 1.31 கோடியில் புதிய பாலம் திறப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே கவுறு வாய்க்கால் குறுக்கே ரூ. 1.31 கோடியில் கட்டப்பட்ட புதிய உயா்மட்ட இணைப்புப் பாலம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. திருவெறும்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்... மேலும் பார்க்க