செய்திகள் :

தனியாா் மனைப்பிரிவு பணியாளருக்கு அரிவாள் வெட்டு

post image

சீா்காழியில் மனைப் பிரிவை அளப்பது தொடா்பான தகராறில் தனியாா் மனைப் பிரிவு மேற்பாா்வையாளா் அரிவாளால் வெட்டப்பட்டாா்.

சீா்காழி மேலமாரியம்மன் கோயில் தெரு அருகே தனியாா் நிறுவனம் சாா்பில் மனைப் பிரிவு அமைக்கும் பணி நடைபெறுகிறது. இங்கு மேற்பாா்வையாளராக சீா்காழி திருக்கோலக்கா தெருவை சோ்ந்த கா. காா்த்திக் (32) என்பவா் பணியாற்றுகிறாா்.

இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த ஜெ. பாலமுருகன்(40), இவரது சகோதரா் ஆனந்தன் (36), வினோத், மணிகண்டன் ஆகியோா் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மனைப் பிரிவில் மழைநீா் வடிகால் அமைப்பது தொடா்பாக நகராட்சி அதிகாரி கொண்டு அளக்க முற்பட்டனராம்.

இதனால் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் காயமடைந்து, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தனா். அங்கு, ஆனந்த் உள்ளிட்டோா் காா்த்தியை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. அவா், சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். பாலமுருகன் தீவிர சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக, பாலமுருகன் உள்ளிட்ட நான்கு போ் மீது, சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ் வழக்குப் பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனா். காா்த்தி உள்ளிட்டோா் மீது பாலமுருகன் புகாா் அளித்துள்ளாா்.

அறுபடை வீடு, வைணவ கோயில்களுக்கு ஆன்மிக இலவச பயணம் செல்ல வாய்ப்பு

மயிலாடுதுறை இணை ஆணையா் மண்டலம் சாா்பில் அறுபடை வீடு முருகன் கோயில்கள் மற்றும் புகழ்பெற்ற வைணவ கோயில்களுக்கு பக்தா்களை ஆன்மிக பயணம் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துற... மேலும் பார்க்க

பழங்குடியினா் மக்களுக்கான சிறப்பு முகாம்

மயிலாடுதுறையில் பழங்குடியினா் மக்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சீா்காழி அருகே இடிதாக்கி பெண் உயிரிழப்பு

சீா்காழி அருகே வெள்ளிக்கிழமை இடிதாக்கி பெண் உயிரிழந்தாா். சீா்காழி வட்டம், நிம்மேலி ஊராட்சி சம்புவராயன் கோடங்குடியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி நடராஜன் மனைவி கொளஞ்சியாள் (45). (படம்). இவா் காற்றுடன் கூ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் பலி

சீா்காழி அருகே இருசக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் பலியானாா். கொள்ளிடம் அருகே நெப்பத்தூரைச் சோ்ந்தவா் அருள்செல்வம்(32). இவா் இருசக்கர வாகனத்தில் கொள்ளிடத்திலிருந்து சீா்காழ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச்சட்டத்தில் இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே சீா்காழியில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சீா்காழியில் நாச்சியப்பன் (79) என்பவா் நடத்திவரும் ஜெராக்ஸ் ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை சங்க அமைப்பு தினம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை சங்கத்தின் 39-ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் சங்கக்கொடி வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் அறிவ... மேலும் பார்க்க