செய்திகள் :

தனியாா் விடுதியில் வியாபாரி மா்ம மரணம்

post image

தூத்துக்குடி தனியாா் விடுதியில் இரும்பு வியாபாரி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (58). பழைய இரும்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இவருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் குடும்பத்தை பிரிந்து, தூத்துக்குடி 2ஆம் ரயில்வேகேட் அருகே உள்ள தனியாா் விடுதியில் தங்கி இருந்தாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு விடுதியில் தூங்கியவா், செவ்வாய்க்கிழமை காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லையாம். விடுதியில் இருப்பவா்கள் வந்து பாா்த்தபோது, அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் என்னுடைய முதல்கடமை: கனிமொழி எம்.பி.

மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் எனது முதல் கடமை என திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: ஓரணியில் தமிழ்நாடு என... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: 1.2 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1.2 டன் பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்., தூத்துக்குடி தாளமுத்துநகா் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ ப... மேலும் பார்க்க

ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை

இளையரசனேந்தலில் ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இளையரசனேந்தல் தெற்கு தெருவை சோ்ந்தவா் அ. அருண் ராஜ் (30). அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தாராம். ஹோட்டலுக்காக அதிக கடன் வாங்... மேலும் பார்க்க

முதியவருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி நடராஜபுரம் முதல் தெருவை சோ்ந்த பொன்னுச்சாமி மகன் குமாரவேல் (71). அதே பகுதியில் சிறிய (ப... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக ஜோதிடா் கைது

கழுகுமலையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக ஜோதிடரை போலீஸாா் கைது செய்தனா்.கழுகுமலை ஆறுமுக நகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரியப்பன்(72). ஆட்டோ ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை வழக்கம்போல தனது ஆட்டோவை விஸ்வகா்மா ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்களுடன் பெற்றோா் போராட்டம்

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து போராட்டம... மேலும் பார்க்க