செய்திகள் :

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

post image

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள  இளம்புவனம் கிராமத்தைச்  சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வாழ்ந்து வருகிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்  என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பிரச்னை குறித்து பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி இரு தரப்பிடமும் எழுதி வாங்கி பிரச்னையை முடித்து வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட முத்தையா- காதலன் சந்தோஷ்

தொடர்ந்து சந்தோஷினால் பிரச்னை வந்ததால் காளியம்மாள் தனது 17 வயது மகளை எட்டயபுரம் அருகேயுள்ள  கீழநம்பிபுரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கீழநம்பிபுரம் வீட்டில் கடந்த 23-ம் தேதி மதியம் திடீரென அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது தீக்காயங்களுடன் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

 உடனடியாக அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ”சந்தோஷ், அவரது நண்பர் முத்தையாவுடன் வீட்டிற்கு வந்து  வழக்கம்போல் தன்னிடம் பேச வேண்டும் என மிரட்டி தொந்தரவு கொடுத்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் என் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்” என தெரிவித்ததாக போலீஸார்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எட்டயபுரம் காவல் நிலையம்

தொடர்ந்து அச்சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார், சந்தோஷ்  மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பேரூரணியில் உள்ள மாவட்டச்  சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் - நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி - புதுச்சேரி ரௌடி கடலூரில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பின்னணி

கடலூர் எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர், நேற்று இரவு பக்கத்து ஊரில் கூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென வழிமறித்... மேலும் பார்க்க

`யாரு முக்கியம்?' - பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்த ஆண் நண்பர்; 2 குழந்தைகள் தவிப்பு

சென்னை பல்லாவரம் அருகே வசித்து வந்தவர் ஜோதி ( 33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதிக்கும் அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு விவாகரத்து வரை செ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர்கள்.. ராமநாதபுரம் போலீஸார் விசாரணை; சிக்கியது எப்படி?

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதை மருந்துகள், கஞ்சா உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. படகுகள் மூலம் கடத்தி செல்லப்படும் கஞ்சாவை இலங்கை கடற்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்ற அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனால் அச்சிறுமி அழுதபடிவக... மேலும் பார்க்க

பல்லடம்: தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்; காதலனின் புகாரால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க