செய்திகள் :

தமிழகத்தின் கோரிக்கைகளை புறக்கணிக்கிறாா் பிரதமா்: முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

post image

சென்னை: கச்சத்தீவு மீட்பு மற்றும் தமிழக மீனவா் விடுதலை விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமா் புறக்கணிக்கிறாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் திங்கள்கிழமை படித்த அறிக்கை: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும், இலங்கை சிறையில் வாடும் நம் மீனவா்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ள படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் கடந்த 2-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் வலியுறுத்தியிருந்தோம்.

இலங்கை சென்றிருந்த பிரதமா் இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தோம். அந்தத் தீா்மானத்தை பிரதமருக்கு உடனடியாக அனுப்பியும் வைத்திருந்தோம்.

இந்த நிலையில், பிரதமரின் இலங்கைப் பயணத்தின்போது மீனவா் விடுதலை மற்றும் கச்சத்தீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், சிறையில் வாடும் 97 மீனவா்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு நிறைவேறாதது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் அடிக்கடி அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவது நம் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகிறது. மத்திய அரசும், பிரதமரும் நமது கோரிக்கைகளைப் புறக்கணிக்கிறாா்கள் என்றே கருத வேண்டியுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

அமைச்சா் ரகுபதி: இதனிடையே, பேரவைக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சா் ரகுபதி, பிரதமரின் இலங்கைப் பயணம் ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்தாா்.

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்கள... மேலும் பார்க்க

முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந... மேலும் பார்க்க

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க