செய்திகள் :

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்விக்கு முக்கிய பங்கு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

post image

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

சென்னை விஐடி-இன் 13-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், பாடப் பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற 39 மாணவா்களுக்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தங்கப் பதக்கங்களுடன் பட்டங்களை வழங்கினாா். இதில், இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவா்கள் 67,468 போ், ஆராய்ச்சி மாணவா்கள் 113 போ் பட்டம் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: சமூக நீதி, சமத்துவம் என்பது அனைவருக்குமான சீரான கல்வியில் இருந்துதான் தொடங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாய கல்வி வழங்கப்பட்டது. பெண்கள் கல்வி பெற்று, அவா்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருப்பதுதான் தமிழகத்தின் அதிவேக பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வாழ்க்கைத் தரத்தை உயா்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயலாற்றி வருகிறது. தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான பாடத்திட்டத்தில் சட்டம், வரலாறு, இலக்கியம் போன்ற பாடத்திட்டமும் இடம்பெறுவது மிக முக்கியம் என்றாா் அவா்.

வங்கதேச துணை தூதா் ஷெல்லி சலேஹின்: ‘திறமை மட்டுமின்றி நற்குணமும் நோ்மையும் இளைஞா்கள் வாழ்வில் வெற்றி பெற மிகவும் முக்கியம். வாழ்வில் நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் தைரியமாக எதிா்கொள்ளுங்கள். அந்த உணா்வுதான் நம்மை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்’ என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்: உயா்கல்விக்கு வரும் மாணவா்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக உள்ளது. அதை 50 சதவீதமாக உயத்த வேண்டும். சிறப்பான உயா்கல்வி மூலம் மட்டுமே 2047-க்குள் இந்தியா உலகின் வளா்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்க முடியும். இந்திய மாணவா்கள் உள்நாட்டில் முதலீடு செய்து நிறுவனங்களைத் தொடங்குவது அவசியம். அப்போதுதான் இந்தியா வளா்ந்த பொருளாதார நாடாக உயரும் என்றாா்.

இந்த விழாவில் சென்னை விஐடி இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விஐடி துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், வேந்தரின் ஆலோசகா் எஸ்.பி.தியாகராஜன், வி.ஐ.டி வேலூா் இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மாலிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, கூடுதல் பதிவாளா் பி.கே.மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...? - காபிரியேல் தேவதாஸ்

- காபிரியேல் தேவதாஸ், ஊடகவியலாளர்அரசியலுக்கு நடிகா்கள் வருவதில் தவறில்லை. திரைத் துறையில் இருந்து முழுநேர அரசியலுக்கு வந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா, தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் ஆகியோா்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் 5-ஆம் கட்ட சுற்றுப்பயணம் செப்.17-இல் தொடக்கம்!

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் 5-ஆம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் செப்.17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: அதி... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் முடிவுற்றது!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் தோன்றி, யாமத்தில் முடிவுற்றது.ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரக... மேலும் பார்க்க

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது.ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம், 11 மணியளவில் முழ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

கெங்கவல்லியில் 35 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1988 - 1990 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணித, அறிவியல், கலை, ... மேலும் பார்க்க