செய்திகள் :

தமிழகத்தில் ஆக. 15 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேசமயம், தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் 110 மி.மீ. மழை பதிவானது. காட்டுமயிலூா் (கடலூா்) - 100 மி.மீ., வேப்பூா், நெய்வேலி, மாத்தூா் (கடலூா்) - 90 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.13-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக முறைகேடு: இரு தனியாா் மருத்துவமனைகளின் சிகிச்சை உரிமம் ரத்து! விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை!

முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்த விவகாரத்தில் இரு தனியாா் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட உரிமம் நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள... மேலும் பார்க்க

பி.இ. மூன்றாம் சுற்று: 64,629 மாணவா்களுக்கு ஒதுக்கீடு! 30,000 இடங்கள் காலி!

பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வில் 64,629 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. நிகழாண்டு தமிழக பொறியியல் கல்லூரிகளில் சுமாா் 30,000 இடங்கள் காலியாக இருக்கக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சீமான்

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா். சென்னையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கை: அன்புமணி கண்டனம்

மாநிலக் கல்விக் கொள்கையில் தமிழ்வழிக் கல்வியை அறிமுகப்படுத்த எந்தத் திட்டமும் இல்லாதது கண்டனத்துக்குரியது என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: த... மேலும் பார்க்க

2026 பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி: ராமதாஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், யார் எதைச் சொன்னாலும் காது கொடுத்து கேளாதீர்கள் என்றும், நான் சொல்வதுதான் நடக்கும் எனவும் அன்... மேலும் பார்க்க

பாமக மகளிர் மாநாடு: பூரண மதுவிலக்கு உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு இன்று (ஆக. 10) நடைபெற்றது.பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ... மேலும் பார்க்க