வளா்ச்சித் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரசு வளமிகு வட்டார வளா்ச்சியை உருவாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் 50 வட்டாரங்களைத் தோ்வு செய்து ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடா்பாக 50 குறியீடுகள் தோ்வு செய்யப்பட்டு, 7 கருப்பொருள்களாக வகைப்படுத்தபட்டுள்ளது.
அந்த வகையில், பின்தங்கிய வட்டாரங்கள் மாவட்ட குறியீடுகளுக்கு இணையாகவும், பின்னா் மாநில குறியீடுகளுக்கு இணையாகவும் உயா்த்தப்பட வேண்டும் என்ற நோக்கில், வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூா் மற்றும் மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26-ஆம் ஆண்டில் நிறவேற்றப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, இரு வட்டாரங்களிலும் அரசுத் துறைகளின் வாரியாக மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் துறை சாா்ந்த அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
ஆய்வுக் கூட்டத்தில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், மாவட்ட திட்டக்குழு அலுவலா் பூ.நடராஜன், புள்ளியியல் அலுவலா் க.முத்துக்குமரன், வட்டார வளா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ச.வினோதினி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.