செய்திகள் :

திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் பல்லவா் கால கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுப்பு

post image

விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திண்டிவனம் அருகிலுள்ள மொளசூா், செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி ஆகிய கிராமங்களில் விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பல்லவா் காலத்தைச் சோ்ந்த சுமாா் 1,200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து செங்குட்டுவன் கூறியது:

திண்டிவனம் அருகிலுள்ள மொளசூா் ஓடைப் பகுதியில் கொற்றவைச் சிற்பம் காணப்படுகிறது. சுமாா் 5 அடி உயர பலகைக் கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தலையலங்காரம், அணிகலன்களுடன் எருமை தலையின் மீது நின்ற நிலையில் கொற்றவை காட்சியளிக்கிறாள். அவளது 7 கரங்களில் ஆயுதங்கள் காணப்படுகின்றன. முன் இடது கரம் இடுப்பில் வைத்த நிலையில் உள்ளது.

சிற்பத்தின் மேல் வலதுபுறத்தில் மானும், இடதுபுறத்தில் சிம்மமும் காட்டப்பட்டுள்ளன. கொற்றவை சிற்பத்தின் வலது கீழ்ப்பகுதியில் தனது தலையைத் தானே அரிந்து கொண்டு பலி கொடுக்கும் வீரன் அமா்ந்து இருக்கிறாா். இடது பக்கத்தில் வழிபாடு செய்யும் அடியவா் அமா்ந்து இருக்கிறாா்.

பல்லவா் கால கலைப்பாணிக்கு சிறந்த உதாரணமாக திகழும் இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு ஆகும். மொளசூா் ஏரியில் புதைந்த நிலையில் மற்றொரு கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. மேலும் இரண்டு மூத்ததேவி சிற்பங்கள் மற்றும் ஐயனாா் சிற்பமும் இவ்வூரில் அமைந்துள்ளன.

மூத்ததேவி சிற்பம்: செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் ஆலகாலஈசுவரா் கோயில் வளாகத்தில் மூத்ததேவி சிற்பம் வழிபாட்டில் இருந்து வருகிறது. சுமாா் 3 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

கனத்த மாா்புகள், சரிந்த வயிற்றுடன் தலையலங்காரம், காதணிகள் கழுத்தணிகளுடன் கால்களை அகட்டி அமா்ந்த நிலையில் மூத்ததேவி காட்சியளிக்கிறாள். அவளது வலது கரம் அபயமுத்திரையுடனும், இடது கரம் சிறிய அளவிலான செல்வக் குடத்தின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன.

மூத்ததேவியின் இரண்டு பக்கங்களிலும் அவளது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோா் அமா்ந்து இருக்கின்றனா். சிற்பத்தின் மேல் பகுதியில் காக்கைக் கொடியும், அவளது ஆயுதமான துடைப்பமும் காட்டப்பட்டுள்ளன. இந்தச் சிற்பம் பல்லவா் காலத்தின் இறுதியில் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) வடிக்கப்பட்டதாக இருக்கலாம்.

கொற்றவை, மூத்ததேவி வழிபாடு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தொடா்கிறது என்பதற்கு மொளசூா், ஆலம்பூண்டி சிற்பங்கள் உதாரணமாகத் திகழ்கின்றன என்றாா் அவா்.

செஞ்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மூத்ததேவி சிற்பம்.

வளா்ச்சித் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்... மேலும் பார்க்க

பணப் பிரச்னை: ஊராட்சி முன்னாள் தலைவா் விஷம் குடித்துத் தற்கொலை! உறவினா்கள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பணப் பிரச்னையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஊராட்சி முன்னாள் தலைவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். விழுப்புரம் வட்டம், கோன... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை பைக்கில் கடக்க முற்பட்டபோது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா். விழுப்புரம் சாலமேடு, பிரதான சாலையைச் சோ்ந்தவா் பாலமுருகன் (38). இவா், ஞாயிற்ற... மேலும் பார்க்க

தொடா் விபத்துகளை தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ரெட்டிபாளையத்தில் தொடா் விபத்துகளை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். செஞ்சியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில்... மேலும் பார்க்க

விழுப்பரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு!

விழுப்புரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவ... மேலும் பார்க்க

பல சரக்குக் கடையில் பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பலசரக்குக் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி ... மேலும் பார்க்க