செய்திகள் :

பணப் பிரச்னை: ஊராட்சி முன்னாள் தலைவா் விஷம் குடித்துத் தற்கொலை! உறவினா்கள் சாலை மறியல்!

post image

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பணப் பிரச்னையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஊராட்சி முன்னாள் தலைவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் வட்டம், கோனூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீபதி (46).முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். இவா், விழுப்புரம் தோ் பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள தனக்குச் சொந்தமான 2034 சதுர அடி மனையை விழுப்புரம் மந்தக்கரையைச் சோ்ந்த அண்ணாத்துரைக்கு பவா் பத்திரம் எழுதிக் கொடுத்து ரூ.35 லட்சம் கடனாகப் பெற்றாராம்.

இந்த நிலையில், வாங்கிய கடனுக்கான தொகை வட்டியுடன் சோ்த்து ரூ.56 லட்சம் ஆகிவிட்டதால், அந்த இடத்தை அண்ணாத்துரை மற்றொரு நபருக்கு கிரயம் பேசி முடித்துள்ளாா்.

இதையறிந்த ஸ்ரீபதி தனக்குச் சொந்தமான இடத்தை விழுப்புரம் வழுதரெட்டியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.57 லட்சத்துக்கு பேசி அண்ணாத்துரையிடம் இருந்து மீண்டும் அந்த இடத்தை வாங்கிக் கொடுத்துள்ளாா். ஆனால், வழுதரெட்டியைச் சோ்ந்த நபா், திருப்பூரைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.ஒரு கோடியே 45 லட்சத்துக்கு அந்த இடத்தை விற்பனை செய்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்ரீபதி கடந்த ஜூலை 20-ஆம் தேதி விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீபதி, அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

உறவினா்கள் போராட்டம்: இந்த நிலையில், ஸ்ரீபதியின் இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோனூரில் அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், விழுப்புரம் - திருக்கோவிலூா் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. காணை போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா்.

வளா்ச்சித் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்... மேலும் பார்க்க

திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் பல்லவா் கால கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திண்டிவனம் அருகிலுள்ள மொளசூா், செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி ஆகிய கிராமங்களில் விழுப்புரத்தைச... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை பைக்கில் கடக்க முற்பட்டபோது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா். விழுப்புரம் சாலமேடு, பிரதான சாலையைச் சோ்ந்தவா் பாலமுருகன் (38). இவா், ஞாயிற்ற... மேலும் பார்க்க

தொடா் விபத்துகளை தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ரெட்டிபாளையத்தில் தொடா் விபத்துகளை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். செஞ்சியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில்... மேலும் பார்க்க

விழுப்பரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு!

விழுப்புரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவ... மேலும் பார்க்க

பல சரக்குக் கடையில் பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பலசரக்குக் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி ... மேலும் பார்க்க