புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விச...
தமிழகத்தில் இனி வெயில் அதிகரிக்கும்
தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இது குறித்து வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 6 நாள்களுக்கு வட வானிலையே நிலவும். இதில் பிப்.6,7 தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.6-இல் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும். அதேசமயம், அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.