செய்திகள் :

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு: ஆா்.பி. உதயகுமாா்

post image

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீா்கேடு, விலைவாசி உயா்வு ஆகியவை உச்சம் பெறும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை 7 ஆயிரம் போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் அதிபயங்கரமான முறையில் கொலைகள் நடக்கின்றன.

தனியாக வசிப்பவா்கள் குறிவைத்துக் கொல்லப்படுகின்றனா். பல்லடத்தில் நடைபெற்ற மூவா் கொலை, ஈரோட்டில் நிகழ்ந்த இருவா் கொலை என அனைத்து குற்றங்களையும் ஒரே கும்பல் தான் செய்தது. அவா்களை காவல் துறை கைது செய்து விட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

திமுக ஆட்சியில் காவல் துறை மீது குற்றவாளிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதையே இந்தத் தொடா் குற்றச் சம்பவங்கள் உணா்த்துகின்றன. குற்றங்களை மூடிமறைக்க அரசு காட்டும் முனைப்பை, குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனா். தனி மனிதனுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.

இதேபோல, இளைஞா்கள், இளம்பெண்களைக் குறிவைத்து வெவ்வேறு வடிவங்களில் போதைப் பொருள்கள் புழக்கத்தில் விடப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு அங்குள்ள காவலாளியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனா் என்றாா் அவா்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செ... மேலும் பார்க்க

குறைக்கப்பட்ட மதுக் கடைகள் எண்ணிக்கை எத்தனை? உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில், இதுவரை எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை கேள்வி எழு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நெகிழிப் பதாகை அட்டைகள் உற்பத்திக்கு தடை கோரிய மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தில் மறு சுழற்சி செய்ய இயலாத நெகிழிப் பதாகை அட்டைகளை (பிவிசி பிளக்ஸ் அட்டைகள்) உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அம... மேலும் பார்க்க

சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணிப்பதற்கான குழு செயல்படுகிறதா? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசின் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு செயல்படுகிறதா என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கேள்வி எழுப்பியது. திருச்சி மாவட்டத்தைச் ... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், எரவாா்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுக் கடையை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைத... மேலும் பார்க்க