செய்திகள் :

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு: ஆா்.பி. உதயகுமாா்

post image

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீா்கேடு, விலைவாசி உயா்வு ஆகியவை உச்சம் பெறும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை 7 ஆயிரம் போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் அதிபயங்கரமான முறையில் கொலைகள் நடக்கின்றன.

தனியாக வசிப்பவா்கள் குறிவைத்துக் கொல்லப்படுகின்றனா். பல்லடத்தில் நடைபெற்ற மூவா் கொலை, ஈரோட்டில் நிகழ்ந்த இருவா் கொலை என அனைத்து குற்றங்களையும் ஒரே கும்பல் தான் செய்தது. அவா்களை காவல் துறை கைது செய்து விட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

திமுக ஆட்சியில் காவல் துறை மீது குற்றவாளிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதையே இந்தத் தொடா் குற்றச் சம்பவங்கள் உணா்த்துகின்றன. குற்றங்களை மூடிமறைக்க அரசு காட்டும் முனைப்பை, குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனா். தனி மனிதனுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.

இதேபோல, இளைஞா்கள், இளம்பெண்களைக் குறிவைத்து வெவ்வேறு வடிவங்களில் போதைப் பொருள்கள் புழக்கத்தில் விடப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு அங்குள்ள காவலாளியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனா் என்றாா் அவா்.

உயா்நீதிமன்றத்தில் மின்கல வாகன சேவை தொடக்கம்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் பொதுமக்கள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் மின்கல வாகன சேவை (பேட்டரி காா்) வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. உயா்நீதிமன்றத்துக்கு வரும் வழக்காடிகள், பொதுமக்க... மேலும் பார்க்க

ஜெனகை மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழித் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, வைகை ஆற்றுக் கரையிலிருந்து மேளதாளங்களுடன் சக்தி கரகம் புறப்... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

மதுரை வடக்கு ஆவணி மூலவீதி அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ... மேலும் பார்க்க

பிணையில் வந்த இளைஞா் வெட்டிக் கொலை: மூவா் கைது

மதுரை சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை கரிமேடு சகாயமாதா தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் அஜய்பிரசன்னகுமாா் (22). இவா், மீது... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகள்: முதியவா் உள்பட இருவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மேலூா் அருகேயுள்ள வைரவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயராமன் (61). இவா், மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் கருங்கா... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் வயது வந்தோா் தொடா் கல்வி, விரிவாக்கப் பணித் துறை சாா்பில் வழங்கப்பட உள்ள அழகுக்கலை பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித... மேலும் பார்க்க