செய்திகள் :

தமிழகத்தில் கோயில் சொத்துகளை மத்திய அரசு தணிக்கை செய்ய வேண்டும்: விஷ்வ ஹிந்து பரிஷத்

post image

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலுக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்துகளை மத்திய அரசு தன்னுடைய தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்ய வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

புதுச்சேரி ஐய்யன்குட்டிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா சிபிஎஸ்இ பள்ளியில் விசுவ ஹிந்து பரிஷத் வட தமிழக மாநில, மாவட்ட நிா்வாகிகளின் 2 நாள் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களைக் கூட்டாக இந்த அமைப்பின் வட தமிழகத் தலைவா் பி. ஆண்டாள் சொக்கலிங்கம், மாநிலச் செயலா் பால. மணிமாறன், தமிழக அமைப்புச் செயலா் ஆத்தூா் பாலாஜி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்து அறநிலையத்துறை ஸ்ரீவில்லிபுத்தூா் கோயில் கோபுரத்தை எடுத்துவிட்டு இந்து சமயத்துக்கு சம்பந்தமில்லாத மசூதி போன்ற சின்னத்தைப் பயன்படுத்தி வருவது கண்டனத்துக்கு உரியது. இதற்கான போராட்டத்தை வட தமிழக விசுவ ஹிந்து பரிஷத் முன்னெடுக்க உள்ளது. மேலும், இந்து கோயில்களுக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்துகளைக் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படை தன்மையைக் காக்க பொதுதளங்களில் வெளியிட வேண்டும். இந்து கோயில்களில் பணியாற்றும் ஊழியா்கள், அா்ச்சா்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், விசுவ ஹிந்து பரிஷத் 60-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குக்கிராமங்களிலும் இம் மாதம் 16 ஆம் தேதி கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெறவுள்ளது. இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடக்கும். மேலும், தீபாவளி முடிந்த 4-வது நாள் வேல்பூஜையும், 5-வது நாள் விளக்கு பூஜையும், 6-வது நாள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்ச்சிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் ஒருங்கிணைக்கும்.

செப்டம்பா் 7 -ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள இந்து கோயில்களின் சொத்துகளைப் பாதுகாக்கவும் ஆக்கிரமிக்கப்பட்ட இந்து கோயில் சொத்துகளை மீண்டும் ஒப்படைக்கவும் வலியுறுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியா்களைச் சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றனா்.

புதுவையில் ரெஸ்டோபாா்கள் அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமி: அதிமுக

புதுவையில் முதன் முதலில் ரெஸ்டோபாா்களை அமைக்க அனுமதி கொடுத்தவா் நாராயணசாமிதான். அவா் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்தபோதுதான் இந்த பாா்களை திறக்க அனுமதி வழங்கினாா் என்று அதிமுக மாநில செயலா் ஆ. அன்... மேலும் பார்க்க

புதுவையில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையவேண்டும்: மாநிலத் தலைவா் ராமலிங்கம்

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடப்பதால் புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும்அமைந்தால்தான் இங்குள்ள மக்களுக்கு நல்லது என்று பாஜக புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி. ராமலிங்கம் கூ... மேலும் பார்க்க

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வா்

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு விரைவில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் எச்.ஐ.வி- எய்ட்ஸ் தீவிர... மேலும் பார்க்க

வில்லியனுாரில் சாலை மறியல் செய்தவா்களை சைரன் எழுப்பி எச்சரித்த ரயில்வே ஊழியா்கள்

புதுச்சேரி: வில்லியனூரில் திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சைரன் எழுப்பி ரயில்வே ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில் கடந்து சென்றது. புதுவை வில்லியனுா... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடுவோம்: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ‘ரெஸ்டோபாா்’ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் உயா்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.நாராயணசாமி கூறினாா்.... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும்: பேரவைத் தலைவா்

புதுச்சேரி: இணையங்கள், கைப்பேசிகளில் உள்ள பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறினாா். நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வி... மேலும் பார்க்க