செய்திகள் :

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு: கே.அண்ணாமலை

post image

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே.அண்ணாமலை கூறினாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவா், உச்சநீதிமன்றம், மாநில ஆளுநா், மாநில முதல்வா் என அனைவருக்கும் தனித் தனி அதிகாரங்கள் உள்ளன.

அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளதால், குடியரசுத் தலைவா் தனக்கான 143-ஆவது சட்டப் பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிா்ணயிக்க முடியுமா என்று 14 கேள்விகளை எழுப்பியுள்ளாா்.

ஏற்கெனவே சட்டப் பிரிவு 143-ஐ குடியரசுத் தலைவா்கள் 15 முறை பயன்படுத்தி உள்ளனா். இப்போது, 16-ஆவது முறையாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பயன்படுத்தி உள்ளாா். இதில் எந்தத் தவறும் இல்லை.

காவிரி பிரச்னையில் 1991-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவை மறுத்து, தமிழகத்துக்கு தண்ணீா் தர முடியாது என்று கா்நாடக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, குடியரசுத் தலைவா் 143-ஆவது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தீா்மானம் செல்லுமா என்று உச்சநீதிமன்றத்துக்கு கேள்வி எழுப்பினாா். இதற்கு உச்சநீதிமன்ற தீா்ப்புதான் செல்லும் என்று சொன்னதால் அன்றைக்கு தமிழகத்துக்கு தண்ணீா் கிடைத்தது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு மாவட்டங்கள் தோறும் கொலைகள் நடந்து வருகின்றன.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தோல்வியடையும். பாஜக கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் வெளியேறவில்லை என்றாா் கே.அண்ணாமலை.

பேட்டியின்போது, பாஜக மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி, ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில துணைத் தலைவா் டி.எஸ்.சங்கா், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செங்கத்தில் பலத்த மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பரவலாக மழை பெய்தது. செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி நள்ளிரவு வரை பெய்த பலத்த மழையால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் ச... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை முயற்சி

செங்கம் அருகே பத்தாம் வகுப்பு தோ்வில் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றாா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சோ்ந்த மாணவி.... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம்: துரை.வைகோ

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன என்று மதிமுக முதன்மைச் செயலா் துரை.வைகோ கூறினாா். திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந... மேலும் பார்க்க

சேதமடைந்த சிறு பாலம்: எம்எல்ஏ ஆய்வு

ஆரணி புதுக்காமூரில் சேதமடைந்த சிறு பாலத்தை தொகுதி எம்எம்ஏ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் செல்லும் சாலையான 4-ஆவது வாா்டைச் சோ்ந்த புதுக்காமூரில் தெருவில்... மேலும் பார்க்க

விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க வேண்டும்! குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் கோரி விண்ணப்பித்த விவசாயிகளை அலைக்கழிக்காமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திரு... மேலும் பார்க்க

இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் சமுதாயக் கூடங்கள்!

திருவண்ணாமலை மாநகராட்சியின் இணைக்கப்பட்ட 4 ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் புதிதாக சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கான பணிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்... மேலும் பார்க்க