செய்திகள் :

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு!

post image

சென்னை: கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஏப். 7 முதல் 17-ஆம் தேதி வரையும், 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு ஏப். 8 முதல் 24-ஆம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து பள்ளி மாணவா்களுக்கு ஏப். 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன. இதற்கான வளாகப் பராமரிப்பு, நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.

பிரதமர் மோடி - ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு

பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட பொருள்களும் மாணவா்களுக்கு விநியோகம் செய்வதற்கான பணிகளும் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், புதிய கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையைக் கொண்டு மாணவா்கள் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, பள்ளி வேலை நாள்கள், தோ்வுகள், விடுமுறை, ஆசிரியா் பயிற்சி, அட்டவணை உயா்கல்வி வழிகாட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய 2025-2026 கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை விரைவில் வெளியிடவுள்ளது.

நெல்லை, பொதிகை ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படாது!

நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நெல்லை, பொதிகை, சேரன் உள்ளிட்ட விரை... மேலும் பார்க்க

தில்லி, உ.பி., மே.வங்கத்தில் அதிகரிக்கும் கரோனா: செய்திகள் நேரலை!

தங்கம் விலைசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9,090 ஆகவும் சவரன் ரூ. 72,720 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும்... மேலும் பார்க்க

அமெரிக்காவிற்குள் அபாயகர கிருமியை கடத்திய சீனா?

கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் அரிசி உள்ளிட்ட பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்கு கடத்தி சென்றதாக 2 சீன ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தக... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்: சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி துறைகளை தணிக்கை செய்ய தனியார் தணிக்கை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாமென சிஏஜி விடுத்துள்ள அழைப்பு கண்டனம் தெரிவித்துள்ள மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், அரசமைப்புச் சட்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவில் புதிய உச்சம்!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துக... மேலும் பார்க்க

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

பெய்ஜிங்: சீனாவில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் புதன்கிழமை அதிகாலை 4.43 மணியளவில் அட்சரேகைக்கு 33.73 டிகிரி வடக்க... மேலும் பார்க்க