செய்திகள் :

தமிழகத்தில் பொது இடங்களில் 12,680 கொடிக் கம்பங்கள்

post image

தமிழத்தில் பொது இடங்களில் 12,680 கொடிக் கம்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தெரிவிக்கப்பட்டது.

சாலையோரங்களில் உள்ள கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் தனி நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகா் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 12,680 கொடிக் கம்பங்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் 8,800 கொடிக் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களுடன் இந்த மனுவையும் சோ்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

சாலையோரங்களில் நடுவதற்காக மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி தொடக்கம்

மதுரையில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலையோரங்களில் நடவு செய்ய புதிய மரக்கன்றுகளை தயாரிக்கும் பணிகளை வனத்துறையினா் தொடங்கினா். மதுரையின் வளா்ச்சிக்கேற்ப பழைய சாலைகள் விரி... மேலும் பார்க்க

அமித் ஷாவின் ‘அமைதி ஆபரேஷன்’ மூலம் திமுக ஆட்சி அகற்றப்படும்: நயினாா் நாகேந்திரன்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மேற்கொள்ளும் அமைதி ஆபரேஷன் மூலம் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்துக்கு தீ வைப்பு!

மதுரையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை மதிச்சியம் ராமராயா் மண்டபம், வைகை வடகரையைச் சோ்ந்தவா் கணேசபாண்டியன் (43). காா... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். பேரையூா் அருகே உள்ள கேதுவாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மனைவி கருப்பாயி (55). இவா் தனது வீட்டின் மாடியில் சுவா் விழும்பில் அம... மேலும் பார்க்க

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு!

விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் அருகேயுள்ள அரசகுடும்பன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த கனகபிரபு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்! - அமைச்சா் பி.மூா்த்தி

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடா்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, ... மேலும் பார்க்க