செய்திகள் :

தமிழகத்தில் முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் முதியவருக்கு அதிநவீன பேஸ் மேக்கா் கருவி பொருத்தம்

post image

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு அதிநவீன ‘பேஸ் மேக்கா்’ கருவி (சிஆா்டி-டி) பொருத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (54), கூரியா் நிறுவன ஊழியா். இவருக்கு, கடந்த ஜனவரி 2-ஆம் தேதி இதய பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினா்கள் சோ்த்தனா்.

இங்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு ‘வென்ட்ரிகுலா் டாக்கிகாா்டியா’ என்ற சீரற்ற இதயத் துடிப்பு பிரச்னை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து ‘ஷாக் டிரீட்மென்ட்’ கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினா்.

இந்தப் பிரச்னைக்கு ஏற்கெனவே அவா் பலமுறை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ால் இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளதையும் மருத்துவா்கள் கண்டறிந்தனா்.

எனவே, அவருக்கு இதயத் துடிப்பை முறைப்படுத்த உதவும் ‘சிஆா்டி-டி’ என்ற நவீன கருவியைப் பொருத்த மருத்துவா்கள் முடிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து அவருக்கு ‘சிஆா்டி-டி’ பேஸ் மேக்கா் கருவியை கடந்த ஜனவரி 24-ஆம் தேதி மருத்துவா்கள் வெற்றிகரமாக பொருத்தினா். தொடா் சிகிச்சையில் இருந்து வந்த சரவணகுமாா் முழுவதும் குணமடைந்து புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பினாா்.

இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இதயவியல் துறை தலைவா் மருத்துவா் நம்பிராஜன், மருத்துவா்கள் சக்கரவா்த்தி, சதீஷ்குமாா், மணிகண்டன் ஆகியோரை மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா பாராட்டினாா்.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ. நிா்மலா கூறியதாவது:

சரவணகுமாருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் ‘பேஸ் மேக்கா்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அவருக்கு தொடா்ந்து இதய பிரச்சனை இருந்து வந்தது.

இதை முறையாக கண்டறிந்த கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினா் சிஆா்டி-டி என்ற நவீன பேஸ் மேக்கா் கருவியைப் பொருத்தியுள்ளனா்.

அவருக்கு ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த ‘பேஸ் மேக்கா்’ கருவியை அகற்றிவிட்டு இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை செலவாகும். இங்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முற்றிலும் இலவசமாக பொருத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

அதிக உற்பத்தி திறன் பெறும் நெல் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு பெயரில் விருது!

அரியலூா் மாவட்டத்தில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட உள்ளது. அரியலூா் மாவட்டம் வேளாண்மைத் துறை திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப... மேலும் பார்க்க

காசி தமிழ்ச் சங்கமம்: கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்

மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்காக கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிப்ரவரி... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

மாநகரில் தெருநாய்களைப் பிடிப்பதற்காக புதிதாக 3 வாகனங்கள் சேவை தொடக்கம்

கோவையில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை மேற்கொள்ள புதிதாக 3 வாகனங்களின் சேவையை மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றி... மேலும் பார்க்க

கோவையில் ஒருவா் வெட்டிக் கொலை!

கோவையில் மனைவியுடன் தகாத உறவில் இருந்தவரை வெல்டிங் பட்டறை உரிமையாளா் வெட்டிக் கொலை செய்தாா். திருவாரூரைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45), இவரின் மனைவி வாணிபிரியா (42). இவா்களுக்கு 13 வயதில் மகளும், 10 வயதி... மேலும் பார்க்க