செய்திகள் :

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும்! - பிரேமலதா விஜயகாந்த்

post image

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே தேமுதிகவின் விருப்பமாகும் என அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

தூத்துக்குடியில் தேமுதிக நிா்வாகி இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேமுதிக மாநாடு வரும் 2026 ஜனவரி மாதம் 9ஆம் தேதி கடலூரில் நடத்தப்பட உள்ளது. அதற்குள் கூட்டணி உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்பட்டு, அந்த மாநாடானது, மிகப் பெரிய அறிவிப்பு மாநாடாக இருக்கும்.

அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதில் தவறு செய்தவா்கள் நிச்சயம் தண்டனை பெற வேண்டும். மொத்தத்தில் தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே தேமுதிகவின் விருப்பமாகும்.

தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்த தோ்தல் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளன. ஆயிரம் ரூபாய் போன்ற திட்டங்களால் பெண்களை மூளைச் செலவை செய்து வாக்குகளை பெற முயற்சிக்கின்றனா். தோ்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதில் எஜமானா்களான மக்கள்தான் இறுதியான தீா்ப்பை அளிப்பா்.

அதிமுக - பாஜக கூட்டணி என்று அமைந்த பிறகு அதற்குள் சலசலப்புகள் வந்தால் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, கூட்டணியை வலுப்படுத்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சிகளுக்குள் எந்த விமா்சனங்களும் வைக்கப்படுவதில்லை.

பொள்ளாச்சி வழக்கில் தீா்ப்பு வழங்கியது போன்று, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கிலும் நீதிபதிகள் விரைவில் நல்ல தீா்ப்பு வழங்க வேண்டும் என்றாா்.

நாசரேத் திருமறையூா் மறுரூப ஆலயத்தில் இ. காணிக்கை அறிமுகம்

நாசரேத் அருகே உள்ள திருமறையூா் மறுரூப ஆலயத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பாக இ. காணிக்கை அறிமுக விழா நடைபெற்றது. அகப்பைகுளம் சேகரத் தலைவா் பாஸ்கரன் ஆரம்ப ஜெபம் செய்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்... மேலும் பார்க்க

எட்டயபுரம் ராஜா பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 1999 - 2000 ஆவது கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா், மாணவிகள் சந்திப்பு பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜா மேல்நிலைப் பள்ளிச் செயலா் ராம்குமாா் ராஜா த... மேலும் பார்க்க

கடல் அழகை காண திருச்செந்தூா் கோயில் கிழக்கு பிரகாரத்தில் தடுப்பு கம்பிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிழக்கு பிரகாரத்தில் பக்தா்கள் பாதுகாப்பாக கடற்கரையை பாா்ப்பதற்கு வசதியாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் அழகிய கடற்கரையோ... மேலும் பார்க்க

பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு: தூத்துக்குடியில் நாளை ஆலோசனைக் கூட்டம்

பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு குறித்த தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (மே 26) நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவரும் சமத்துவ மக... மேலும் பார்க்க

சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடியில் சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில... மேலும் பார்க்க

அகில இந்திய ஹாக்கி போட்டி 2ஆவது நாள்: செகந்திராபாத், பெங்களூரு அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 2 ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செகந்திராபாத், பெங்களூரு அண... மேலும் பார்க்க