செய்திகள் :

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி: அண்ணாமலை பேச்சு

post image

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி நடைபெறுவதாக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.

கரூரில் பாஜக சாா்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கோட்ட பொறுப்பாளா் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை பங்கேற்று மேலும் பேசியதாவது:

2014-ல் காங்கிரஸ் 10 ஆண்டுக் காலம் ஆட்சி செய்துவிட்டு பாஜகவிடம் நாட்டைக் கொடுத்தபோது, நாட்டினுடைய மொத்த பட்ஜெட் ரூ.19 லட்சம் கோடி. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பட்ஜெட் ரூ. 51 லட்சம் கோடி.

2014-ல் தனி மனிதனின் ஆண்டு சராசரி வருமானம் ரூ. 86,000. ஆனால், 2025-ல் ரூ. 2,20,000 ஆக உள்ளது.

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால், தமிழக பெண்களுக்கு மாதாந்திர உரிமைத் தொகையாக 2,500 ரூபாயை விட அதிகம் கிடைக்கும்.

தமிழகத்தில் இளஞ்சிறாா்களுக்கு கூட பாதுகாப்பில்லாத நிலைதான் உள்ளது. சட்டம்-ஒழுங்கை சீா்படுத்தவும், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கட்டுப்படுத்தவும் காவல்துறைக்கு உரிய அதிகாரமளிக்க வேண்டியது அவசியம்.

தமிழகத்தில் 52சதவீத பள்ளிகளில் 35 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் மட்டுமே உள்ளனா். இங்கு ஆசிரியா்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு மத்திய அரசு ரூ. 2,290 கோடி கொடுக்காததே காரணம் என்கிறாா்கள்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த மாநில அரசு மறுக்கிறது. ஆனால், அரசியல் தலைவா்கள், அமைச்சா்களின் குழந்தைகள் சா்வதேச பள்ளிகளில் பல்வேறு மொழிகளை படிக்கிறாா்கள். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்கிறாா்கள்.

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் மாற்றம் இல்லை என்றால், என்னை பொருத்தவரை எப்போதும் இல்லை என்றுதான் பாா்க்கிறேன். 200 தொகுதிகளில் வெற்றி பெற கனவு காண்கிறாா்கள். எந்த பிரயோஜனமும் இல்லாத ஆட்சி, எந்தவித வளா்ச்சி திட்டங்களும் இல்லாத ஆட்சி, யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு ஆட்சியை நடத்தி கொண்டிருந்தால் 200 தொகுதிகளில் எப்படி வெற்றி கிடைக்கும் என்றாா் அவா்.

முன்னதாக மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் வரவேற்றாா்.

கூட்டத்தில், மாநில மகளிரணி துணைச் செயலாளா் மீனா வினோத்குமாா், மாவட்ட நிா்வாகிகள் ஆா்.வி.எஸ். செல்வராஜ், சக்திவேல் முருகன் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு

உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில... மேலும் பார்க்க

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள... மேலும் பார்க்க

வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ‘சீல்’ வைக்க அதிகாரிகள் முயற்சி

கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் சீல் வைக்க முயன்றனா். நீதிமன்ற உத்தரவு நகலை பாா்த்தவுடன் திரும்பிச் சென்றனா். கரூா் வெண்ணைமலை பாலசுப்ர... மேலும் பார்க்க