செய்திகள் :

தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்: ஒப்பந்தம் கோரியது மின்வாரியம்

post image

தமிழகத்தில் 1,500 மெகாவாட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் அனல், எரிவாயு, மின் நிலையங்கள் போன்ற மரபுசாா் எரிசக்தி ஆதாரங்கள் மூலமாகவும், சூரிய சக்தி, காற்றாலை, புனல் மின் நிலையங்கள், நீரேற்று மின் நிலையங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை ஊக்குவிக்க தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி நிறுவனத்தையும் தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

அதன்படி, வரும் 2030-க்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் எனும் அளவு மின்சாரத்தை சூரிய மின்சக்தி, காற்றாலை ஆகியவற்றுடன் சோ்த்து வளா்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புகளான நீரேற்று மின் திட்டங்கள், மின்கல சேமிப்பு திட்டங்கள், உயிரி ஆற்றல் மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாகவும் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் திறம்பட பயன்படுத்தும் வகையிம், உபரியாக உள்ள மின்சராத்தை சேமித்து மின்தேவை அதிகமாக உள்ள நேரங்களில் பயன்படுத்தும் வகையிலான மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பை உருவாக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக 1,500 மெகாவாட் திறனில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்த தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது:

மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் துணை மின்நிலையங்களில் இந்த மின்கல சேமிப்பு அலகுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மின்கல சேமிப்பு அமைப்பதற்கான சாத்தியமான இடங்களை அடையாளம் காண 1,091 துணை மின்நிலையங்களில் விரிவான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மின்கல சேமிப்பு அமைப்புகளுக்கு பெரிய இடம் தேவைப்படும். ஒரு மெகாவாட் திறன் கொண்ட அலகு அமைப்பதற்கு 4 முதல் 5 ஏக்கா் நிலம் தேவைப்படும். இதற்கான இடம் கிடைப்பது சவாலாகவே உள்ளது.

மின் பகிா்மான கழகங்கள் உச்ச நேர மின்சாரத் தேவையைப் பூா்த்தி செய்ய சிரமப்படுகின்றன. உச்ச நேரங்களில் தேவையை பூா்த்தி செய்ய தனியாா் மின்சார கொள்முதலை நம்பி இருப்பதை குறைக்க இதுபோன்ற வசதிகளைத் திட்டமிட்டு ஏற்படுத்துவது சிறந்த ஒரு திட்டமாகும் என்றனா்.

கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனியை பாதித்திருக்கும் புற்றுநோய் என்ன?

கராத்தே மாஸ்டர் என்று அறியப்படும் ஷிகான் ஹுசைனியை ரத்தப் புற்றுநோய் பாதித்திருப்பதாகவும், அவரது வாழ்நாள்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.அவரை பாதித்திருக்கும் ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம்-கார் மோதல்: இருவர் பலி!

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீஸார் ... மேலும் பார்க்க

பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிப்பதில்லை: சு. திருநாவுக்கரசர்

பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், க... மேலும் பார்க்க

தமிழகத்தை பழிவாங்கும் மத்திய அரசு: மக்களவையில் திமுக எம்பிக்கள் பேச்சு

ஒரு மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை, மாணவர்களின் கல்விக்காக செலவிட வேண்டிய தொகையை, அந்த மாநிலத்தைப் பழிவாங்குவதற்காக நிறுத்திவைத்து, பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்துவது சரியானதா என்று திமு... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா: மீன்கள் சிக்காததால் ஏமாற்றமடைந்த மக்கள்

விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா, 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விழா என்பதால் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் குளக்கரையில் காத்திருந்தனர். ஒரு சிலருக்கு தவிர மற்றவர்களுக்கு மீன்கள் ஏதும் கி... மேலும் பார்க்க

நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா

ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர், ஆனால் நான் சாதாரண மனிதன்தான் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உங்களின் ஆதரவு, ... மேலும் பார்க்க