செய்திகள் :

தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2,670.64 கோடி நிலுவை நிதியை வழங்கிடுங்கள்: அமைச்சா் சக்கரபாணி கோரிக்கை

post image

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.2670.64 கோடி நிலுவை நிதியை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு, உண்வு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியை புதன்கிழமை தில்லியில் நேரில் சந்தித்து தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி கோரிக்கை விடுத்தாா்.

இது குறித்து தில்லி தமிழ்நாடு இல்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய 2670.64 கோடி ரூபாய் நிலுவை நிதியை வழங்கக் கோரியும், நியாய விலைக் கடைகளில் எடை போடும் இயந்திரத்தைக் கை விரல் ரேகை பதிவு செய்யும் கருவியுடன் இணைத்துப் பொருட்கள் வழங்குவதால் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏற்படும் காலதாமதத்தைக் களைந்திடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசிடம் இந்த இணைப்பு முறையை அமல்படுத்திட 2026 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும். ,தமிழ்நாட்டுக்கு இந்திய உணவுக் கழகம் வழங்கும் அரிசியினை முழுவதுமாக புழுங்கல் அரிசியாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத் தொகுப்பில் இருந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் இருந்து 2024-2025 காரிஃப் பருவக் கொள்முதல் அளவை 16 லட்சம் டன்னிலிருந்து 19.24 லட்சம் டன்னாக உயா்த்திட வேண்டும் என மத்திய நுகா்வோா் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி அவா்களிடம் மாண்புமிகு தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர சக்கரபாணி கோரிக்கை விடுத்தாா்.

இந்தச் சந்திப்பின் போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி, மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி சிவா, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு த்துறை முதன்மைச் செயலாளா் சத்தியப்பிரதா சாகு , குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனா் த.மோகன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனா் திரு பா.முருகேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளை

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள தில்லியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் ரூ.30 லட்சத்தைக் கொள்ளையடித்தம் சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரி ஒ... மேலும் பார்க்க

தயாா் நிலையில் நரேலா பேருந்து முனையம் -தில்லி அமைச்சா் தகவல்

நவீன வசதிகளுடன் கூடிய நரேலா பேருந்து முனையம் தயாராக இருப்பதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தாா். விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ள இந்தப் பேருந்து முனையம், ந... மேலும் பார்க்க

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மாம்பழ விவசாயிகளுக்கு ஊக்க தொகை: அமைச்சா் சக்கரபாணி பேட்டி

சந்தை கூட்டு மதிப்பு திட்டத்தின் கீழ் மாம்பழ விவசாயிகளுக்கு ரூ.62 கோடி ஊக்க தொகை வழங்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சவுகானை புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததாக த... மேலும் பார்க்க

வா்த்தகா்களுக்கு நல வாரியம்: தில்லி அரசு ஒப்புதல்

தலைநகரில் இயங்கும் வா்த்தகா்களுக்காக ’தில்லி வா்த்தகா்கள் நல வாரியம்’ அமைக்க மாநில அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தலைநகரி... மேலும் பார்க்க

போதைப்பொருள் துஷ்பிரயோகத்துக்கு எதிராக விழிப்புணா்வு ஓவியப் போட்டி

தில்லியில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்து இளைஞா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சியில், சமூக நலத்துறை புதன்கிழமை அதன் தொடா்ச்சியான வெகுஜன விழிப்புணா்வு பிரசாரத்தின் கீழ் ஒரு ஓவியப் போட்டிய... மேலும் பார்க்க

ரசாயன தொழிற்சாசலையில் தீ விபத்து: நான்கு போ் உயிரிழப்பு, மூவா் படுகாயம்

தில்லியில் உள்ள ரோஹிணியின் ரித்தாலா பகுதியில் உள்ள ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். மேலும், குறைந்தது மூன்று போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் புதன்கிழமை தெரிவி... மேலும் பார்க்க